Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தம்பதியை தாக்கிய 5 பேருக்கு வலை

தம்பதியை தாக்கிய 5 பேருக்கு வலை

தம்பதியை தாக்கிய 5 பேருக்கு வலை

தம்பதியை தாக்கிய 5 பேருக்கு வலை

ADDED : ஜூலை 25, 2024 11:10 PM


Google News
புதுச்சேரி: முத்தியால்பேட்டையை சேர்ந்தவர் மணி, 45; மாடுகள் வளர்த்து வருகிறார். இவரது மாடுகள் சாலையில் நிற்பது தொடர்பாக, இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பொன்னரசன் என்பவருக்கும் இடையே ஏற்கனவே தகராறு ஏற்பட்டது.

நேற்று முன்தினம், மணி வீட்டில் துாங்கி கொண்டிருந்தார். அவரது வீட்டிற்கு வந்த, பொன்னரசன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நான்கு பேர், சேர்ந்து, மணியை தாக்கினர். தடுக்க வந்த அவரது மனைவியையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து தப்பி சென்றனர்.

காயமடைந்த, மணி, அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து, புகாரின் பேரில், முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, பொன்னரசன் உட்பட 5 பேரை தேடி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us