ADDED : ஜூலை 26, 2024 04:17 AM
புதுச்சேரி: மனைவி பிரிந்த சோகத்தில் அதிகமாக குடித்த கொத்தனார் இறந்தார்.
கரிக்கலாம்பாக்கம் அடுத்த புதுக்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சரவணன், 33; கொத்தனார். இவரது மனைவி பிரித்தா.
இவர்களுக்கு நான்கு வயதில் மகள் உள்ளார். பிரித்தா கடந்த நான்கு ஆண்டுகளாக சரவணனை பிரிந்து வாழ்கிறார்.
இதில் மனமுடைந்த சரவணன் தினமும் குடித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு அதிகமாக குடித்துவிட்டு வந்த சரவணன் அவரது அறையில் ரத்த வாந்தி எடுத்து பரிதாபமாக இறந்தார். புகாரின் பேரில் கரிக்கலாம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.