/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மீன்பிடி படகுகளில் பொருத்த உள்ள இஸ்ரோவின் டிரான்ஸ்பான்டர்கள் மீனவர்களுக்கு செயல் விளக்கம் மீன்பிடி படகுகளில் பொருத்த உள்ள இஸ்ரோவின் டிரான்ஸ்பான்டர்கள் மீனவர்களுக்கு செயல் விளக்கம்
மீன்பிடி படகுகளில் பொருத்த உள்ள இஸ்ரோவின் டிரான்ஸ்பான்டர்கள் மீனவர்களுக்கு செயல் விளக்கம்
மீன்பிடி படகுகளில் பொருத்த உள்ள இஸ்ரோவின் டிரான்ஸ்பான்டர்கள் மீனவர்களுக்கு செயல் விளக்கம்
மீன்பிடி படகுகளில் பொருத்த உள்ள இஸ்ரோவின் டிரான்ஸ்பான்டர்கள் மீனவர்களுக்கு செயல் விளக்கம்
ADDED : ஆக 01, 2024 06:35 AM

புதுச்சேரி: படகுகளில் பொருத்தப்பட உள்ள டிரான்ஸ்பான்டர்கள் செயல் விளக்கம் அளிக்கும் நிகழ்ச்சி நடந்தது.
இந்தியாவின் சந்திராயன் 3 விண்கலம் நிலவின் தென் பகுதியில் வெற்றிகரமாக தரையிறங்கிய வரலாற்று நிகழ்வு நினைவாக ஆகஸ்ட் 23ம் தேதி தேசிய விண்வெளி தினம் கொண்டாடப்படுகிறது.
வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வின் நினைவாக மீனவர்கள், மத்திய மாநில மீன்வளத்துறை அதிகாரிகள், பல்கலைக்கழக மாணவர்களுக்கு, மத்திய மீன்வளத்துறை அமைச்சகம் மூலம், இஸ்ரோ இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், மத்திய மீனவர் கடல் சார் பொறியியல் பயிற்சி நிறுவனம், புதுச்சேரி மீன்வளத்துறை ஆகியன சார்பில் தேங்காய்த்திட்டு மீன்பிடி துறைமுகம் வளாகத்தில் பயிலரங்கு நடந்தது.
நாடு முழுதும் இஸ்ரோ தயாரித்துள்ள டிரான்ஸ்பான்டர் என்ற கருவி பொருத்தப்பட உள்ளது. இதன் மூலம் வானிலை நிலவரம், புயல் எச்சரிக்கை, மீன்கள் அதிகம் உள்ள இடம், சர்வதேச கடல் எல்லைகள் உள்ளிட்ட தகவல்கள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள முடியும்.
இந்த உபகரணத்தின் செயல்பாடுகள் மற்றும் இஸ்ரோவின் பங்கு குறித்து விளக்கப்பட்டது.
மீன்வளத்துறை இயக்குநர் முகமது இஸ்மாயில், இணை இயக்குநர் தெய்வசிகாமணி, மத்திய மீன்வள கடல் சார் பொறியியல் பயிற்சி நிறுவன அதிகாரி கார்த்திக், முதுநிலை பயிற்சியாளர் கோபி கிருஷ்ணன், இஸ்ரோ அதிகாரி அன்பரசு, புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழக பேராசிரியர் ஜெயந்தி, மீன்பிடி விசைப்படகு உரிமையாளர்கள் மாணவர்கள், கலந்து கொண்டனர்.