Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ இரும்புச்சத்து மாத்திரை விழிப்புணர்வு நிகழ்ச்சி 

இரும்புச்சத்து மாத்திரை விழிப்புணர்வு நிகழ்ச்சி 

இரும்புச்சத்து மாத்திரை விழிப்புணர்வு நிகழ்ச்சி 

இரும்புச்சத்து மாத்திரை விழிப்புணர்வு நிகழ்ச்சி 

ADDED : ஜூன் 22, 2024 04:40 AM


Google News
புதுச்சேரி, : இந்திரா நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில், இரும்புச்சத்து மாத்திரை விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நடந்தது.

கோரிமேடு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், இரும்புச்சத்து மாத்திரை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, இந்திரா நகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. இந்த நிகழ்வில், தலைமை ஆசிரியை சாருமதி வரவேற்றார்.

பள்ளி முதல்வர் சந்திரன், சுகாதார நிலைய பொறுப்பு மருத்துவ அதிகாரி சித்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுகாதார ஆய்வாளர் லியோனா, இரும்புச்சத்து மாத்திரைகள் உட்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து உரையாற்றினார்.

சுகாதார உதவியாளர் சிவக்குமார், மாணவர்களின் சுய சுத்தம் மற்றும் கை கழுவும் முறை குறித்து விளக்கி கூறினார்.

நிறைவாக ஆசிரியை கல்பனா நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளியின் ஆசிரியர்கள், சுகாதார உதவியாளர் ஜெகநாதன் ஆகியோர் மேற்கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us