Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ முத்துரத்தினம் அரங்கம் பள்ளியில் என்.எஸ்.எஸ்., அறிமுக விழா

முத்துரத்தினம் அரங்கம் பள்ளியில் என்.எஸ்.எஸ்., அறிமுக விழா

முத்துரத்தினம் அரங்கம் பள்ளியில் என்.எஸ்.எஸ்., அறிமுக விழா

முத்துரத்தினம் அரங்கம் பள்ளியில் என்.எஸ்.எஸ்., அறிமுக விழா

ADDED : ஜூன் 26, 2024 02:24 AM


Google News
Latest Tamil News
புதுச்சேரி : கவுண்டன்பாளையம் முத்துரத்தினம் அரங்கம் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 மாணவர்களுக்கான நாட்டு நலப்பணித்திட்ட அறிமுக விழா நடந்தது.

பள்ளி தாளாளர் மருத்துவர் ரத்தின ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக மாநில அளவிலான நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் சதீஷ்குமார், பள்ளி அளவிலான நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் மதிவாணன் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி நிகழ்ச்சியினை துவக்கி வைத்தனர்.

புதுச்சேரி மாநில ஒருங்கிணைந்த கோஜூரியோ கராத்தே சங்க மாநில செயலாளர் சுந்தர்ராஜன் வாழ்த்துரை வழங்கினார். பள்ளியின் முதல்வர் கவிதா சுந்தர்ராஜன் முன்னிலை வகித்து, நாட்டு நல பணித் திட்டத்தின் அவசியம் மற்றும் அதன் நன்மைகள் குறித்து பேசினார்.

ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ஜெயந்தி மற்றும் முன்னாள் திட்ட அலுவலர் நெடுஞ்செழியன், பள்ளி பொறுப்பாளர்கள் ஜஸ்டின், ஜீவா ஆகியோர் செய்திருந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us