ADDED : ஜூலை 25, 2024 05:32 AM
அரியாங்குப்பம்: மனைவியை காணவில்லை என கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
தவளக்குப்பம் அடுத்த நல்லவாடு பகுதியை சேர்ந்தவர் கதிரவன். இவரது மனைவி சுபத்ரா, 23. கடந்த 14ம் தேதி வெளியே சென்ற இவர், வீடு திரும்பவில்லை. உறவினர்கள் வீடு உட்பட பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இதுகுறித்து, கதிரவன் கொடுத்த புகாரின் பேரில், தவளக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து, சுபத்ராவை தேடி வருகின்றனர்.