ADDED : ஜூன் 22, 2024 05:07 AM

புதுச்சேரி : சஞ்சீவி நகர் அரசு துவக்க பள்ளியில் இலவச புத்தகம், சீருடை வழங்கும் விழா நடந்தது.
பள்ளி தலைமை ஆசிரியை அலமேலு தலைமை தாங்கினார். ஆசிரியர் பாலமுருகன் வரவேற்றார். கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., சிறப்புரையாற்றி பள்ளி மாணவர்களுக்கு இலவச பாட புத்தகம், சீருடைகளை வழங்கினார். நிகழ்ச்சியை ஆசிரியை ரம்யா தொகுத்து வழங்கினார்.
ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர். நிகழ்ச்சியில் பெற்றோர், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.