Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பிரான்ஸ் தேசிய தினம் போர் வீரர் நினைவு துாணில் மரியாதை

பிரான்ஸ் தேசிய தினம் போர் வீரர் நினைவு துாணில் மரியாதை

பிரான்ஸ் தேசிய தினம் போர் வீரர் நினைவு துாணில் மரியாதை

பிரான்ஸ் தேசிய தினம் போர் வீரர் நினைவு துாணில் மரியாதை

ADDED : ஜூலை 15, 2024 02:21 AM


Google News
Latest Tamil News
புதுச்சேரி: பிரான்ஸ் நாட்டின் தேசிய தினத்தையொட்டி, கடற்கரை போர் வீரர் நினைவு துாணில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.

பிரான்ஸ் நாட்டில் கடந்த 1789ம் ஆண்டு ஜூலை 14ம் தேதி மக்கள் புரட்சியின் மூலம் மன்னராட்சி முடிவுக்கு கொண்டு வந்து, மக்களாட்சி நிறுவப்பட்டது.

இதன் நினைவாக ஆண்டு தோறும் ஜூலை 14ம் தேதி, பிரான்ஸ் தேசிய தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, புதுச்சேரியில் 235வது பிரான்ஸ் தேசிய தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது.

இதனையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள போர் வீரர் நினைவுத் துாணில் புதுச்சேரிக்கான பிரான்ஸ் நாட்டுத் துணைத் துாதர் லிசே டல்போட் பர்ரே, புதுச்சேரி அரசு சார்பில் கலெக்டர் குலோத்துங்கன் ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில், இந்தியா, பிரான்ஸ் இரு நாட்டுக் கொடிகள் ஏற்றப்பட்டு, தேசிய கீதங்கள் இசைக்கப்பட்டன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us