ADDED : ஜூன் 22, 2024 04:12 AM

புதுச்சேரி, : டியூஷனுக்கு சென்ற மகளை காணவில்லை என தந்தை போலீசில் புகார் செய்துள்ளார்.
வில்லியனுார் அடுத்த சுல்தான்பேட்டையை சேர்ந்தவர் முகமது ரபீக். இவரது மகள் அப்ரா,15; இவர் கடந்த 5ம் தேதி வீட்டில் அதே பகுதியில் இருந்து டியூஷனுக்கு நடந்து சென்றார். இரவு வரை வீட்டுக்கு அவர் வரததால் சந்தேகமடைந்த அவரது பெற்றோர் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
புகாரின் பேரில் வில்லியனுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.