Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ நெல் விளைச்சல் பாதிப்பால் கிலோ அரிசி ரூ.80 ஆக உயர்வு: விலையை குறைக்க அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

நெல் விளைச்சல் பாதிப்பால் கிலோ அரிசி ரூ.80 ஆக உயர்வு: விலையை குறைக்க அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

நெல் விளைச்சல் பாதிப்பால் கிலோ அரிசி ரூ.80 ஆக உயர்வு: விலையை குறைக்க அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

நெல் விளைச்சல் பாதிப்பால் கிலோ அரிசி ரூ.80 ஆக உயர்வு: விலையை குறைக்க அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

ADDED : ஜூன் 11, 2024 05:37 AM


Google News
நெல் விளைச்சல் பாதிப்பால் ஒரு கிலோ அரிசி, 80 ரூபாயாக எகிறியுள்ள நிலையில், விலையை குறைக்க, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிழக நெல் தேவையில், தஞ்சாவூர் மாவட்டம், 48 சதவீதம்; ஈரோடு, சேலம், கள்ளக்குறிச்சி, கரூர், நாமக்கல், காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகள், 19 சதவீதம் பூர்த்தி செய்கின்றன. மீதி, 37 சதவீதம் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து வாங்கப்படுகிறது. பருவநிலை மாற்றம், வடமாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் வறட்சியால் கடந்தாண்டு நெல் மகசூல் பாதிக்கப்பட்டு அரிசி விலை உயர்ந்தது.

குறிப்பாக, 'தமிழகத்தில் நெல் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் டெல்டா மாவட்டங்களில் கடந்த ஆண்டு பருவமழை போதிய அளவு பெய்யாததால் குறுவையிட் பயிரிடப்பட்ட 2 லட்சம் ஏக்கர் பயிர் பாதிக்கப்பட்டு மகசூல் பாதியாக குறைந்தது' என, டெல்டா பகுதி விவசாயிகள் கூறுகின்றனர்.

கடந்த ஆண்டு மார்ச்சில் கிலோ, 35க்கு விற்ற, ஏ.டி.டி., 45 ரகம், ரூ.49 ஆக உயர்ந்துள்ளது. பி.பி.டி., ரகம் கிலோ, ரூ.46ல் இருந்து ரூ.65க்கும், வெள்ளை பொன்னி ரூ.56ல் இருந்து ரூ.75 ஆகவும், பழைய பொன்னி ரூ.80 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் இட்லி அரிசி என்ற கிட்டகார் ரூ.52ல் இருந்து ரூ.60 ஆக உயர்ந்துள்ளது. இது சாமானிய மக்கள், நடுத்தர வர்க்கத்தினருக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர் சங்க மாநில செயலர் பரணிதரன் கூறியதாவது:

கடந்தாண்டு பருவ மழை பாதிப்பால், நெல் சாகுபடி பரப்பளவு 50 சதவீதம் குறைந்ததால், நெல் மற்றும் அரிசி விலை உயர்ந்துள்ளது. கடந்தாண்டு நெல் கிலோ ரூ.19க்கு கொள்முதல் செய்யப்பட்டது. கடந்த ஏப்ரலி்ல ரூ.24 ஆக உயர்ந்தது. தற்போது நெல் பற்றாக்குறை அதிகரித்து ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து முதல் ரக நெல் கிலோ, ரூ.30 ஆக உயர்ந்துள்ளது. நெல் விலை உயர்வால் அரிசி விலையும் உயர்ந்துள்ளது. இது அடுத்த மாதம் மேலும் உயர வாய்ப்புள்ளது.

தமிழகத்தில், 200 ஆலைகளில், 100 கிலோ வாட் வரை, சோலார்(சூரிய சக்தி) மின்சாரம் தயாரித்து உபயோகப்படுத்தும் அரிசி ஆலைகள் உள்ளன. இந்த ஆலைகளுக்கு சோலார் மின்சாரத்துக்கு, 'நெட்வொர்க் சார்ஜ்' என, வசூல் செய்யப்படுகிறது.

சோலார் மின் திட்டத்தை ஊக்கப்படுத்த வேண்டிய தமிழக அரசு, இதுபோன்ற கட்டணத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். மின் கட்டணத்தை குறைக்கக்கோரி, 2 ஆண்டுகளாக போராடியும் பலன் இல்லை. மேலும் அரிசி விலை உயர்ந்தால் தமிழக அரசுக்கு தான் கெட்டப்பெயர் ஏற்படும்.

மேலும் மின் கட்டணத்தை உயர்த்தாமல் அரிசி விலையை குறைக்க, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்

- நமது சிறப்பு நிருபர் -.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us