Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ முத்தியால்பேட்டையில் வரும் 21ம் தேதி குடிநீர் கட் 

முத்தியால்பேட்டையில் வரும் 21ம் தேதி குடிநீர் கட் 

முத்தியால்பேட்டையில் வரும் 21ம் தேதி குடிநீர் கட் 

முத்தியால்பேட்டையில் வரும் 21ம் தேதி குடிநீர் கட் 

ADDED : ஜூன் 19, 2024 05:29 AM


Google News
புதுச்சேரி : பராமரிப்பு பணி காரணமாக வரும் 21ம் தேதி முத்தியால்பேட்டையில் குடிநீர் சப்ளை நிறுத்தப்படும் என பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது.

பொதுசுகாதார கோட்டம் செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

புதுச்சேரி குடிநீர் உட்கோட்டம், வடக்கு பிரிவுக்கு உட்பட்ட வைத்திக்குப்பம் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் வரும் 21ம் தேதி மதியம் 12:00 மணி முதல் 2:00 மணி வரை புதுச்சேரி முத்தியால்பேட்டை முழுதும், சோலை நகர், கணேஷ் நகர், அங்காளம்மன் நகர், மஞ்சினி நகர், வா.உ.சி. நகர், வைத்திக்குப்பம், குருசுக்குப்பம், மாணிக்க முதலியார் தோட்டம், தெபேசன் பேட், விஸ்வநாதன் நகர் மற்றும் அதனைச் சார்ந்த பகுதிகளில் குடிநீர் விநியோகம் தடைபடும் என தெரிவித்து கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us