/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ விபத்தில் காயமடைந்த மாற்றுத்திறனாளி சாவு விபத்தில் காயமடைந்த மாற்றுத்திறனாளி சாவு
விபத்தில் காயமடைந்த மாற்றுத்திறனாளி சாவு
விபத்தில் காயமடைந்த மாற்றுத்திறனாளி சாவு
விபத்தில் காயமடைந்த மாற்றுத்திறனாளி சாவு
ADDED : ஜூலை 25, 2024 05:30 AM
பாகூர்: பைக் மீது கார் மோதிய விபத்தில் படுகாயமடைந்த மாற்றுத்திறனாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தவளக்குப்பம் அடுத்த பூரணாங்குப்பம் பொன்னம்பலம் நகரை சேர்ந்தவர் மாதேஷ் 45; மாற்றுத்திறனாளி. இவர் நோனாங்குப்பம் மேம்பாலத்தின் அருகே இளநீர் கடை நடத்தி வந்தார். இவரது மனைவி மாதலட்சுமி. மூன்று மகள்கள் உள்ளனர்.
கடந்த 13ம் தேதி இரவு மாதேஷ் தனது நான்கு சக்கர பைக்கில், சொந்த வேலையாக அரியாங்குப்பம் நோக்கி சென்றார். நோனாங்குப்பம் பாலத்தின் அருகே சென்ற போது, அவ்வழியாக சென்ற சுசூகி கார், அவரது பைக் மீது மோதியது. படுகாயமடைந்த மாதேஷ், புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். விபத்து குறித்து கிருமாம்பாக்கம் தெற்கு போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.