/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கருணை அடிப்படையில் வேலை கேட்டு ஆர்ப்பாட்டம் கருணை அடிப்படையில் வேலை கேட்டு ஆர்ப்பாட்டம்
கருணை அடிப்படையில் வேலை கேட்டு ஆர்ப்பாட்டம்
கருணை அடிப்படையில் வேலை கேட்டு ஆர்ப்பாட்டம்
கருணை அடிப்படையில் வேலை கேட்டு ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 05, 2024 06:40 AM

புதுச்சேரி: கருணை அடிப்படையில் வேலை கேட்டு ஆர்ப்பாட்டம் நடந்தது.
புதுச்சேரி நகராட்சியில் பணிபுரிந்து இறந்துபோன மற்றும் மருத்துவ ஓய்வு பெற்ற ஊழியர்களின் வாரிசுதாரர்கள் கருணை அடிப்படையில் வேலை கேட்டு 177 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
ஆனால், 20 ஆண்டுகளுக்கு மேலாக கருணை அடிப்படையில் வேலை வழங்கப்படவில்லை. இதனை கண்டித்து புதுச்சேரி மாநில நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர் வாரிசுதாரர்கள் சங்கம் சார்பில், அண்ணா சிலை எதிரே ஆர்ப்பாட்டம் நடந்தது.
நகராட்சி கொம்யூன் பஞ்சாயத்து தலைவர் ஆனந்த் கணபதி தலைமை தாங்கினார். வாரிசுதாரர் சங்க செயலாளர் சத்தியன், நகராட்சி கொம்யூன் பஞ்சாயத்து செயலாளர் பிரபு முன்னிலை வகித்தனர். அரசு ஊழியர் சம்மேளன பொது செயலாளர் ராதாகிருஷ்ணன், பொருளாளர் கிறிஸ்தோபர், நிர்வாகி நமச்சிவாயம் சிறப்புரையாற்றினர்.
நகராட்சி சங்க தலைவர் கலியபெருமாள், செயலாளர் வேளாண்கண்ணிதாசன், வாரிசுதாரர் சங்க பொறுப்பாளர் ரவி, பொருளாளர் லாரன்ஸ் கண்டன உரையாற்றினர். கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.