Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தேர்தல் பணியாற்றிய போலீசாருக்கு சிறப்பு ஊதியம் வழங்க கோரிக்கை

தேர்தல் பணியாற்றிய போலீசாருக்கு சிறப்பு ஊதியம் வழங்க கோரிக்கை

தேர்தல் பணியாற்றிய போலீசாருக்கு சிறப்பு ஊதியம் வழங்க கோரிக்கை

தேர்தல் பணியாற்றிய போலீசாருக்கு சிறப்பு ஊதியம் வழங்க கோரிக்கை

ADDED : ஜூன் 30, 2024 05:19 AM


Google News
புதுச்சேரி, : புதுச்சேரி லோக்சபா தேர்லில் பணியாற்றிய போலீஸ் துறையினருக்கு, சிறப்பு ஊதியத்தை உடனே வழங்க வேண்டும் என, அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்பு குழு மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் கூறியதாவது:

சமீபத்தில் புதுச்சேரி லோக்சபா தேர்தல் எந்தவித பிரச்னையும் இல்லாமல் அமைதியான முறையில் நடந்து முடிந்தது. இதற்கு போலீஸ் துறையினரின் செயல்பாடு மிக முக்கியம்.

தேர்தலின் போது அவர்கள் விழிப்புடன் செயல்பட்டதால் சிறு அசம்பாவிதம் இல்லாமல் தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது. ஆனால் அவர்களுக்கு தேர்தல் பணியாற்றியமைக்காக வழங்கப்படும் சிறப்பு ஊதியம் இன்று வரை வழங்கப்படாமல் உள்ளது.

இதனை அரசு உடனடியாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தே.ஜ., கூட்டணி அரசு காவலர்களுக்கு உரிய பதவி உயர்வு அளித்து சிறப்பு செய்தது வரவேற்கத்தக்கது.

அதே நேரத்தில் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய தேர்தல் சிறப்பு ஊதியம் உடனடியாக வழங்கப்பட வேண்டும். முதல்வரும், உள்துறை அமைச்சரும் ஊதியத்தை உடனடியாக வழங்கநடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us