Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஜி.எஸ்.டி., தினத்தையொட்டி விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம்

ஜி.எஸ்.டி., தினத்தையொட்டி விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம்

ஜி.எஸ்.டி., தினத்தையொட்டி விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம்

ஜி.எஸ்.டி., தினத்தையொட்டி விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம்

ADDED : ஜூலை 01, 2024 06:38 AM


Google News
Latest Tamil News
புதுச்சேரி : ஜி.எஸ்.டி., தினத்தையொட்டி விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம் நடந்தது.

நாடு முழுதும் ஜி.எஸ்.டி., வரித் திட்டம், கடந்த 2017ம் ஆண்டு ஜூலை 17ம் தேதி அமுலாக்கப்பட்டதை முன்னிட்டு ஆண்டுதோறும் ஜூலை 17ம் தேதி ஜி.எஸ்.டி., தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

மத்திய ஜி.எஸ்.டி., மற்றும் கலால் வரி புதுச்சேரி ஆணையர் அலுவலகம் சார்பில், இன்று 1ம் தேதி இந்தாண்டிற்கான ஜி.எஸ்.டி., தின விழாவையொட்டி, பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக நேற்று காலை 7:00 மணிக்கு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சைக்கிள் ஊர்வலம் நடந்தது.

கடற்கரை சாலையில் உள்ள மத்திய ஜி.எஸ்.டி., மற்றும் கலால் வரி ஆணையர் அலுவலகத்தில் துவங்கிய ஊர்வலத்திற்கு ஆணையர் பத்மஸ்ரீ தலைமை தாங்கினார். கூடுதல் ஆணையர் பிரஷாந்த் குமார் காக்கர்லா கொடியசைத்து துவக்கி வைத்தார்.

அரசு பொது மருத்துவமனை, எச்.எம்.,காசிம் சாலை, அஜந்தா சிக்னல், முத்தியால்பேட்டை, இ.சி.ஆர் சிவாஜி சிலை, ராஜிவ் சிக்னல் வழியாக கோரிமேடு நுழைவு வாயிலை அடைந்தது.

தொடர்ந்து, ஊர்வலம் ஜிப்மர், ராஜிவ் சிக்னல், இந்திரா சிக்னல், நெல்லித்தோப்பு, ரயில்வே நிலையம், எச்.எம்.,காசிம் சாலை வழியாக மத்திய ஜி.எஸ்.டி., அலுவலகத்தில் நிறைவடைந்தது.

ஏற்பாடுகளை கண்காணிப்பாளர் பன்னீர்செல்வம், சுரேந்தர், குமரேசன், ஆய்வாளர் கபில் கந்தல்வால் ஒருங்கிணைத்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us