Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வக்கீல் படித்தவர் மாயம்; போலீசார் விசாரணை

வக்கீல் படித்தவர் மாயம்; போலீசார் விசாரணை

வக்கீல் படித்தவர் மாயம்; போலீசார் விசாரணை

வக்கீல் படித்தவர் மாயம்; போலீசார் விசாரணை

ADDED : ஜூலை 01, 2024 06:40 AM


Google News
அரியாங்குப்பம் : வக்கீலுக்கு படித்தவர் மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அரியாங்குப்பம் கட்டபொம்மன் தெருவை சேர்ந்தவர் விஜய். இவரது மகன் மணிகண்டன், 29; இவர், எல்.எல்.பி., மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.

மனநிலை பிரச்னை இருந்த அவர், அடிக்கடி வெளியில் சென்று வீட்டுக்கு வந்துவிடுவார்.

கடந்த 26ம் தேதி வீட்டில் இருந்து வெளியில் சென்றவர் மாலை வரை வரவில்லை. உறவினர்கள் உள்ளிட்ட பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

புகாரின் பேரில், அரியாங்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us