Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மொபைல் போன்களை திருடிய 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது

மொபைல் போன்களை திருடிய 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது

மொபைல் போன்களை திருடிய 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது

மொபைல் போன்களை திருடிய 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது

ADDED : ஆக 02, 2024 01:34 AM


Google News
திருக்கனுார்: திருக்கனுார் பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்தவர் விஷ்வா, 20; பட்டதாரி. இவர் தனது தம்பியுடன் கடந்த 23ம் தேதி வீட்டில் துாங்கியுள்ளார். காலை எழுந்து பார்த்தபோது, வீட்டில் இருந்த ரூ. 40 ஆயிரம் மதிப்பிலான 2 விலை உயர்ந்த மொபைல் போன்கள் மர்ம நபர்களால் திருடப்பட்டிருந்தது.

இதுகுறித்து விஷ்வா அளித்த புகாரின் பேரில், திருக்கனுார் சப் இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், அதே பகுதியைச் சேர்ந்த இரண்டு சிறுவர்கள் பைக்கில் வந்து, விஷ்வா வீட்டில் இருந்த 2 மொபைல் போன்களை திருடி சென்றது தெரியவந்தது.

இருவரையும் பிடித்து விசாரித்ததில் திருடிய 2 மொபைல் போன்களையும், மண்ணாடிப்பட்டைச் சேர்ந்த மனோபாலா, 23; என்பவரிடம் கொடுத்து வைத்திருப்பதாக தெரிவித்தனர்.

தொடர்ந்து, மனோபாலாவை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த இரண்டு மொபைல் போன்கள் மற்றும் திருட்டுக்கு பயன்படுத்திய பைக் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பின்னர், கைது செய்யப்பட்ட 2 சிறுவர்கள் உட்பட 3 பேரையும் நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி

காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us