Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ இரு வீடுகளில் நகை திருட்டு கடலுாரில் 3 பேர் கைது

இரு வீடுகளில் நகை திருட்டு கடலுாரில் 3 பேர் கைது

இரு வீடுகளில் நகை திருட்டு கடலுாரில் 3 பேர் கைது

இரு வீடுகளில் நகை திருட்டு கடலுாரில் 3 பேர் கைது

ADDED : ஜூன் 03, 2024 06:07 AM


Google News
Latest Tamil News
கடலுார் ; கடலுாரில் இரு வீடுகளில், 6 சவரன் நகைகளை திருடிய வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கடலுார், செல்லங்குப்பத்தைச் சேர்ந்தவர் ராமு, 43; இவரது வீட்டில் கடந்த 30ம் தேதி 3 சவரன் நகை, 1 லட்சத்து 30 ஆயிரம் ரூபாயை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இவரது வீட்டின் மாடியில் உள்ள அவரது மாமியார் வீட்டிலும் பீரோ உடைக்கப்பட்டு 3 சவரன் நகை மற்றும் 40 ஆயிரம் ரூபாயை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். நகைகளின் மொத்த மதிப்பு 3 லட்சம் ரூபாய் ஆகும்.

புகாரின் பேரில், கடலுார், முதுநகர் போலீசார் வழக்கு பதிந்தனர். குற்றவாளிகளை பிடிக்க டி.எஸ்.பி., பிரபு தலைமையில், தனிப்படை அமைக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ரேவதி தலைமையில் போலீசார் நேற்று முதுநகர் மணிகூண்டு அருகில், வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, 2 பைக்குகளில் வந்த 3 பேரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரணை நடத்தினர். முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதால் சந்தேகமடைந்த போலீசார், காவல் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினர்.

இதில், கீழ் புவனகிரியை சேர்ந்த சுரேஷ், 38; கருங்குழி ஆனந்தராஜ், 22; புளியங்குடி கலையரசன், 18; என்பதும் தெரிந்தது. இவர்கள் செல்லங்குப்பம் ராமு வீட்டில் நகைகளை திருடியதை ஒப்புக் கொண்டனர். இவர்களிடம் இருந்து 5 சவரன் நகை, 2 பைக்குகளை பறிமுதல் செய்தனர்.

மூன்று பேரையும் முதுநகர் போலீசார் கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us