Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சிவப்பு ரேஷன் கார்டு விவகாரம் சி.பி.ஐ., விசாரிக்க கோரி விவாதம்

சிவப்பு ரேஷன் கார்டு விவகாரம் சி.பி.ஐ., விசாரிக்க கோரி விவாதம்

சிவப்பு ரேஷன் கார்டு விவகாரம் சி.பி.ஐ., விசாரிக்க கோரி விவாதம்

சிவப்பு ரேஷன் கார்டு விவகாரம் சி.பி.ஐ., விசாரிக்க கோரி விவாதம்

ADDED : ஆக 02, 2024 01:15 AM


Google News
புதுச்சேரி: லஞ்சம் பெற்றுக் கொண்டு சிவப்பு ரேஷன் கார்டு வழங்கிய குற்றச்சாட்டை சி.பி.ஐ., விசாரிக்க உத்தரவிட கோரி எம்.எல்.ஏ.க்கள் விவாதம் நடந்தது.

புதுச்சேரி சட்டசபையில் கவர்னர் உரை மீதான விவாதத்தில் சுயேட்சை எம்.எல்.ஏ., அங்காளன் பேசுகையில்;

குடிமைப்பொருள் வழங்கல் துறையில் கடந்த 3 ஆண்டுகளாக வழங்கப்பட்ட சிவப்பு ரேஷன் கார்டுகளில் முறைகேடு நடந்துள்ளது. லஞ்சம் கொடுத்தால் மட்டுமே சிவப்பு ரேஷன் கார்டு என்ற நிலை உருவாகி விட்டது. மத்திய அரசு நிர்ணயித்துள்ள இலக்கை விட கூடுதலாக 1 லட்சம் கார்டுகள் உள்ளதால், எப்படி நலத்திட்டம் கொண்டு வர முடியும். கடந்த 3 ஆண்டுகள் வழங்கி ரேஷன் கார்டுகளை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்.

அமைச்சர் சாய் சரவணன்: யாருக்கும் தவறான வழியில் ரேஷன் கார்டு வழங்கவில்லை.

நேரு: ரூ. 15 ஆயிரம் லஞ்சம் வாங்கி கொண்டு சிவப்பு ரேஷன் கார்டு வழங்கி உள்ளனர்.

அமைச்சர் சாய் சரவணன்; ஆதாரம் இல்லாமல் பேசாதீர்கள்.

பி.ஆர்.சிவா: ரேஷன் கார்டு முறைகேடு குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுங்கள்.

சாய் சரவணன்குமார்: குற்றச்சாட்டை நிருபிக்க ஆதாரம் வேண்டும். ஆதாரம் இருக்கிறதா? லஞ்சம் எங்கு யாருக்கு தந்தார்கள் என்பதை தெளிவாக கூறுங்கள்.

அங்காளன்: துறையே அமைச்சரை விட்டு போய்விட்டது. அது தெரியாமல் பேசுகிறார். முறைகேடு நடக்கவில்லை என்றால், ஏன் குடிமை பொருள் அலுவலகம் 6 மாதம் மூடப்பட்டு கிடக்கிறது.

சாய்சரவணன் குமார்: அதிகமானோர் விண்ணப்பித்தால் நிறுத்தி வைத்துள்ளோம்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us