ADDED : ஜூன் 18, 2024 11:59 PM
நெட்டப்பாக்கம் : பண்டசோழநல்லுாரில் இடி மின்னலுடன் கனமழை பெய்ததாதல் 2 மணி நேரம் மின் தடை ஏற்பட்டது.
புதுச்சேரியில் கடந்த சில மாதங்களாக சுட்டெரித்த வெயிலால் மக்களை வாட்டி வதைத்து வந்த நிலையில், கடந்த சில தினங்களாக வெயில் சதம் அடித்தது. நேற்று மாலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலை 6.30 மணி முதல் நெட்டப்பாக்கம் மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதியில் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. குறிப்பாக பண்டசோழநல்லுார் கிராமத்தில் நேற்று மாலை 6.30 மணி முதல் தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் 2 மணி நேரத்திற்கும் மேலாக மின்தடை ஏற்பட்டது.