சி.பி.ஐ., விசாரணை கேட்டு நாங்கள் மனு போடவில்லை; கரூரில் உயிரிழந்தோர் உறவினர்கள் திடீர் அறிவிப்பு
சி.பி.ஐ., விசாரணை கேட்டு நாங்கள் மனு போடவில்லை; கரூரில் உயிரிழந்தோர் உறவினர்கள் திடீர் அறிவிப்பு
சி.பி.ஐ., விசாரணை கேட்டு நாங்கள் மனு போடவில்லை; கரூரில் உயிரிழந்தோர் உறவினர்கள் திடீர் அறிவிப்பு

செல்வராஜ் கூறியதாவது:
த.வெ.க., கூட்டத்தில் சிக்கி, என் மனைவி சந்திரா உயிரிழந்தார். இதனால், என் மூத்த மகனுக்கு அரசு வேலையும், கூடுதல் நிதி உதவியும் பெற்று தருவதாக கூறி, ஏமூர் கிராம பஞ்சாயத்து முன்னாள் தலைவரும், தான்தோன்றிமலை கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க., செயலருமான பால கிருஷ்ணன், விண்ணப்ப படிவத்தில் கையெழுத்து வாங்கினார்.
உயிரிழந்த சிறுவனின் தாய் ஷர்மிளா கூறியதாவது:
உச்ச நீதிமன்றத்தில் சி.பி.ஐ., விசாரணை கேட்டு, நான் வழக்கு போடவில்லை. என் கணவர் பன்னீர்செல்வம் தான், சி.பி.ஐ., விசாரணை கேட்டார். அவர், எட்டு ஆண்டுகளுக்கு முன், என்னையும், உயிரிழந்த மகனையும் விட்டு பிரிந்து விட்டார். அவருடன், எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை.
விரும்பி தான் கையெழுத்திட்டனர்!
ஏமூர் பஞ்., முன்னாள் தலைவர் என்ற முறையில் அனைவரையும் எனக்கு நன்றாகத் தெரியும். அடிப்படையில் நானும் ஒரு வக்கீல். செல்வராஜ், சுயவிருப்பத்தின் பேரில்தான், சி.பி.ஐ., விசாரணை கேட்டு, விண்ணப்பத்தில் கையெழுத்து போட்டார். யாரையும் மிரட்டியெல்லாம் கையெழுத்து பெற முடியுமா? இதற்காக, சட்டரீதியான விசாரணை வந்தால், அதை சந்திக்க தயாராக உள்ளேன்.


