அந்த 45 நாட்கள்... எம்.எஸ்.எம்.இ., 'பேமண்ட்' கவனம் செலுத்துங்கள்!
அந்த 45 நாட்கள்... எம்.எஸ்.எம்.இ., 'பேமண்ட்' கவனம் செலுத்துங்கள்!
அந்த 45 நாட்கள்... எம்.எஸ்.எம்.இ., 'பேமண்ட்' கவனம் செலுத்துங்கள்!

49 சதவீதம்
உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்குக் கூடுதல் வாய்ப்பு அளிக்கும் வகையில் ரூ.200 கோடி வரையிலான கொள்முதல்களுக்கு உலக அளவிலான டெண்டர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு, 'எம்.எஸ்.எம்.இ.,' நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது.
ரூ.10.7 லட்சம் கோடி
சிறு, குறு, நடுத்தர தொழில்கள் மேம்பாட்டு சட்டத்தின் படி, உதயம் போர்ட்டலில் பதிவு செய்யப்பட்டு, 'எம்.எஸ்.எம்.இ.,' தொழில்துறையில் இருந்து ஏதேனும் பொருட்களை வாங்கும் அல்லது ஏதேனும் சேவையைப் பெறும் எந்தவொரு வாங்குபவரும், ஒப்புக்கொள்ளப்பட்ட தேதியில் அல்லது அதற்கு முன்பு பணம் செலுத்த வேண்டும்.
புதிய விதி
கடந்த 2023 ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட புதிய நிதி சட்டத்தின் 43பி பிரிவின் படி, 'சிறு, குறு, நடுத்தர தொழிற்சாலைகளுக்கு 45 நாட்களுக்குள் பணம் தரப்படவில்லை என்றால், அந்த தொகையை, வருமான வரி தாக்கலின்போது, செலவு கணக்கில் காட்ட முடியாது. அந்தப் பணத்துக்கும் வருமான வரி விதிக்கப்படும். கொடுக்கப்படும் ஆண்டு வரிக்கழிவு பெறும்.
முக்கியமான தருணம்
இதை ஏற்கனவே கவனத்தில் கொண்டு, உரிய தேதிகளில் கொள்முதல் தொகை செலுத்தியவர்களுக்கு பிரச்னை இருக்கப்போவதில்லை. நிதியாண்டு நிறைவு பெறுவதற்கு இன்னும் ஒன்றரை மாதம் இருக்கிறது. ஆகவே இது முக்கியமான தருணம். 'எம்.எஸ்.எம்.இ.,' நிறுவனங்களுக்கு உரிய நேரத்தில் பணம் செலுத்துப்பட்டுவிட்டதா என்பதை உறுதி செய்துகொள்வது வரிச்செலவைக் குறைக்கும். முதலில் உங்கள் சப்ளையர் எம்.எஸ்.எம்.இ அமைப்பில் பதிவு செய்யப்பட்டவரா என்பதற்கான ஆதாரங்களைப்பெற்று க்கொள்ள வேண்டும்.