யானை வழித்தடம்: அரசின் அறிவிப்பும், அரசியல் எதிர்ப்பும்
யானை வழித்தடம்: அரசின் அறிவிப்பும், அரசியல் எதிர்ப்பும்
யானை வழித்தடம்: அரசின் அறிவிப்பும், அரசியல் எதிர்ப்பும்

![]() |
1,160 யானைகள் பலி
இந்தியாவில், 2010 - 2020 இடையிலான ஆண்டுகளில், இயற்கையாக அல்லாமல், 1,160 யானைகள் உயிரிழந்து உள்ளன. இவற்றில், 64 சதவீதம் மின்சாரம் பாய்ந்து பலியாகின. ரயில் விபத்து, வேட்டை, விஷம் வைத்தல் ஆகிய காரணங்களால், மீதமுள்ள யானைகள் கொல்லப்பட்டுள்ளதாக, மத்திய அரசின் யானை பாதுகாப்பு திட்ட தரவுகள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவங்கள் அதிகம் நடப்பது கொங்கு மண்டலத்தில் தான்.
![]() |
வழக்கு
இந்த சூழலில் தான், சென்னையை சேர்ந்த வன உயிரின ஆர்வலர் முரளிதரன், கோவை, தடாகம் பள்ளத்தாக்கில் சட்ட விரோதமாக இயங்கிய செங்கல் சூளைகளுக்கு எதிராக, 2019ல் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
எதிர்ப்பு பின்னணி
தமிழகத்தில், இந்த வழக்கு வரும் வரை, யானை வழித்தடங்களின் அதிகாரப்பூர்வ கணக்கு எடுக்கப்படவே இல்லை. தன்னார்வ அமைப்புகள் மற்றும் தனி ஆராய்ச்சியாளர்கள் கொடுத்த தரவுகளின் அடிப்படையில் தான், யானை வழித்தடம் என்பது வனத்துறையால் இதுவரை அடையாளம் காணப்பட்டு உள்ளது.
அவங்க 20; இவங்க 4
ஏன் இந்த முரண்பாடு?
மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம், கடந்த ஆண்டில் வெளியிட்ட இந்தியாவின் யானை வழித்தடங்கள் அறிக்கையில், நாடு முழுதும் 150 யானை வழித்தடங்கள் உள்ளன. அதிகபட்சமாக மேற்கு வங்கத்தில் 25, தமிழகத்தில் 20 தடங்கள் இடம் பெற்றிருந்தன. இப்போது தமிழக வனத்துறை வெளியிட்ட வரைவில், தமிழகத்தில் 42 வழித்தடங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஒரே ஆண்டில் எப்படி 22 வழித்தடங்கள் அதிகரித்தன என்பதே, இப்போது கேள்வி.மத்திய அரசு கடந்த ஆண்டு வெளியிட்ட அறிக்கை, இந்திய வன உயிரின நிறுவனம் தயாரித்துக் கொடுத்தது. அதில், 'இது முழுமையான அறிக்கை இல்லை' என்று, 'பொறுப்பு துறப்பு' தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் இன்னும் தகவல்கள் சேர்க்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி, தமிழக வனத்துறை இப்போது வெளியிடப்பட்டுள்ள யானை வழித்தட வரைவு அறிக்கையிலும், 42 யானை வழித்தடங்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும், அவை அனைத்துமே வழித்தடங்களாக இல்லாமல், மூன்று வகைகளில் பிரிக்கப்பட்டுள்ளன.யானைகளுக்கான வாழ்விடங்களை உறுதிப்படுத்தும் வகையில், நிலப்பரப்பு இணைப்பு மண்டலம், அதிமுக்கிய யானை வழித்தடம், முக்கிய யானைப்பாதை என, மூன்று வகைகளில் பிரித்து, வரைவு அறிக்கையை குழு தயாரித்துள்ளது. இதுவும் வரைவு அறிக்கை என்பதால், பல மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் என்றே அதில் கூறப்பட்டுள்ளது.மத்திய அரசு, கடந்த ஆண்டில் வெளியிட்ட யானை வழித்தட அறிக்கையில் உள்ள 20 வழித்தடங்களும், தமிழக வனத்துறை இப்போது வெளியிட்டுள்ள வரைவு அறிக்கையில் இடம் பெற்றுள்ளன. ஆனால், அவற்றை தவிர்த்து, யானை வாழ்விடங்களை இணைக்கும் நிலப்பரப்புகள், யானைகள் மாற்றாக பயன்படுத்தும் பாதைகள் ஆகியவையும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. ஒரே ஆண்டில் 22 வழித்தடங்கள் அதிகரிக்க இதுவே காரணம் என, தெரிவிக்கப்படுகிறது.
1
கடந்த 2006 - 2018 வரையிலான ஆண்டுகளில், இந்தியாவிலேயே அதிகளவு யானை-மனித மோதல் நடந்துள்ள பகுதிகளில் கோவைக்கான இடம்
கொங்குவில் 61 சதவீதம்
தமிழகத்தில் உள்ள 26 வனக்கோட்டங்களில், 20 வனக்கோட்டங்களுக்கு உட்பட்ட 9,217 சதுர கி.மீ., பரப்பு வனங்களில், 2,961 யானைகள் இருப்பதாக, 2023 யானை கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. இவற்றில், ஊட்டி, மசினகுடி மற்றும் முதுமலை புலிகள் காப்பகத்தில் மட்டும், 790 யானைகள் அதாவது 27 சதவீதம் வாழ்கின்றன.
பலதரப்பட்ட கருத்துக்கள்
யானை வழித்தட அறிக்கை வரைவில் மிக முக்கியமான பகுதிகளில் வேண்டுமென்றே சில பகுதிகளை தவிர்த்துள்ளனர். அறிக்கையில் ஒரு எண்ணிக்கை, கோர்ட்டில் ஒரு எண்ணிக்கையை தெரிவித்துள்ளனர். முதலில் 42 வழித்தடங்கள் எவை என்பதை விளக்கி, தமிழில் அறிக்கை வெளியிட வேண்டும்; யானையின் உண்மையான வழித்தடங்களை மறைக்க முயற்சி நடந்தால், அதற்கு கோர்ட்டில் வனத்துறை பதில் சொல்ல வேண்டும். - எஸ்.முரளிதரன், வழித்தட வரைவுக்கு காரணமான பொதுநல மனு தாக்கல் செய்தவர், சென்னை.