Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/ப்ரீமியம்/ வாழ தகுதியற்ற மாநிலமாக மாறி வரும் தமிழகம்

வாழ தகுதியற்ற மாநிலமாக மாறி வரும் தமிழகம்

வாழ தகுதியற்ற மாநிலமாக மாறி வரும் தமிழகம்

வாழ தகுதியற்ற மாநிலமாக மாறி வரும் தமிழகம்

ADDED : ஜூன் 09, 2025 03:20 AM


Google News
Latest Tamil News
அண்மைக் காலங்களில், தோட்டத்து வீடுகளில் தனியாக வாழ்ந்து வரும் முதியோர் படுகொலை செய்யப்படுகின்றனர். நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலுாரை அடுத்த சீத்தம்பூண்டியில், தனியாக வாழ்ந்து வந்த சாமியாத்தாள் என்ற மூதாட்டி நேற்று முன்தினம் கொல்லப்பட்டுள்ளார். ஈரோடு கொலையில், நான்கு பேரை கைது செய்த போலீசார், அவர்கள் தான் பல்லடம் கொலையையும் செய்ததாக கூறி வழக்குகளை முடித்தனர்.

இப்போது, பரமத்தி வேலுார் அருகே, மேலும் ஒரு கொலை நடந்துள்ளது. இந்தக் கொலையை செய்தவர்கள் யார்? குற்றவாளிகளைப் பிடித்து விட்டதாக நாடகமாடிய தி.மு.க., அரசின் முகமூடி கிழிந்து விட்டது. தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், 7,000க்கும் மேற்பட்ட படுகொலை நடந்துள்ளன. சராசரியாக தினமும் ஐந்து பேர் கொல்லப்படுகின்றனர். சாலையில் சென்றாலும், வீடுகளில் இருந்தாலும் மக்களின் உயிருக்கு பாதுகாப்பு இல்லை. மொத்தத்தில் தமிழகம் வாழத்தகுதியற்ற மாநிலமாக மாறி வருகிறது.

- அன்புமணி

தலைவர், பா.ம.க.,





      Our Apps Available On




      Dinamalar

      Follow us