சட்டசபை நடக்கும் போதே தொடர் கொலைகள்; அரசுக்கு தர்மசங்கடம்; கோட்டை விட்ட உளவுப்பிரிவு
சட்டசபை நடக்கும் போதே தொடர் கொலைகள்; அரசுக்கு தர்மசங்கடம்; கோட்டை விட்ட உளவுப்பிரிவு
சட்டசபை நடக்கும் போதே தொடர் கொலைகள்; அரசுக்கு தர்மசங்கடம்; கோட்டை விட்ட உளவுப்பிரிவு

'ஹை அலெர்ட்'
தமிழகத்தில் தொடர் கொலைகள் நடந்து வருவதாக பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க., குற்றஞ்சாட்டியது. இதற்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், '2012 முதல் 2024 வரையிலான அ.தி.மு.க., - தி.மு.க., ஆட்சியில், 2012ல் தான் அதிகபட்சம், 1,943; 2013ல், 1,927 கொலைகள் நடந்துள்ளன.
அடுத்தடுத்து கொலை
கடந்த 16ல் கரூர், நரிசுட்டியூரில் ரவுடி சந்தோஷ்குமார் குத்திக்கொலை செய்யப்பட்டார்; 18ல் திருநெல்வேலியில் ஓய்வு பெற்ற எஸ்.ஐ., ஜாஹிர் உசேன் வெட்டிக்கொலை; 19ல் ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே தேசிய நெடுஞ்சாலையில், சேலத்தைச் சேர்ந்த ரவுடி ஜான், தான் பயணம் செய்த காரிலேயே வெட்டிக்கொலை என, கொலை பட்டியல் நீள்கிறது.
சிபாரிசில் பதவி
அதுவும் சட்டசபை கூட்டத்தொடர் அறிவிக்கப்பட்ட பின், தமிழகத்தில் அடுத்தடுத்து 11 கொலைகள் நடந்துள்ளன. மூன்றரை ஆண்டில் எஸ்.பி.,க்கள் முதல் ஐ.ஜி., உளவுப்பிரிவு, ஏ.டி.ஜி.பி., சட்டம் - ஒழுங்கு, மாநகர ஆணையர்கள் என அனைவரும், சிபாரிசில் உயர் பதவியில் அமர்ந்துள்ளனர். தி.மு.க., கூட்டணி கட்சியினர் பரிந்துரைத்த அதிகாரிகள் பலர் முக்கிய பதவியில் உள்ளனர். வேண்டியவர்களுக்கு பதவி வழங்கியதும், நேர்மையான, திறமையான பல அதிகாரிகள் ஓரங்கட்டி வைக்கப்பட்டிருப்பதும், தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கை கேள்விக்குறியாக்கி உள்ளது.