Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/ப்ரீமியம்/கட்சி ஒன்றுபட சசிகலா உண்ணாவிரதம்?

கட்சி ஒன்றுபட சசிகலா உண்ணாவிரதம்?

கட்சி ஒன்றுபட சசிகலா உண்ணாவிரதம்?

கட்சி ஒன்றுபட சசிகலா உண்ணாவிரதம்?

ADDED : ஜூன் 07, 2024 04:36 AM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சிதறிக் கிடக்கும் அ.தி.மு.க.,வினரை ஒன்றுபடுத்த, தொடர் உண்ணாவிரதம் இருக்க, சசிகலா திட்டமிட்டுள்ளதாக, அவரது ஆதரவு வட்டாரத்தில் கூறப்படுகிறது.

இதுகுறித்து சசிகலா ஆதரவாளர்கள் கூறியதாவது: அ.தி.மு.க.,வை பாதுகாக்க, சசிகலா தலைமையில் இணைய வேண்டும். அதற்காக, ஜெயலலிதா நினைவிடத்தில் தியானம் அல்லது நீண்ட உண்ணாவிரதம் இருக்க, சசிகலா திட்டமிட்டுள்ளார். ஒற்றுமையை விரும்பும் தொண்டர்கள், அவருக்கு ஆதரவு தருவர். அதற்கான முயற்சியை சசிகலா எடுக்க உள்ளார்.

இனியும் அமைதியாக இருக்கக் கூடாது என சசிகலாவிடம் தெரிவித்துள்ளோம். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் பதவி ஏற்பு விழாவிற்கு வரும்படி, சசிகலாவிற்கு அழைப்பு வந்துள்ளது. அதன் பின், நல்ல முடிவை அறிவிப்பதாக சசிகலா, எங்களிடம் உறுதி அளித்துள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஓ.பி.எஸ்., ஆதரவாளர்களுக்கு வலை


அ.தி.மு.க.,வில் இருந்து பிரிந்து சென்றவர்கள், நீக்கப்பட்டவர்கள் போன்றோரிடம் பேசி, அவர்களை கட்சியில் இணைப்பதற்காக, முன்னாள் அமைச்சர்கள் அடங்கிய குழுவை, இ.பி.எஸ்., நியமித்துள்ளார்.
ஓ.பி.எஸ்., ஆதரவாளர்களாக உள்ள, முன்னாள் அமைச்சர்கள் வைத்திலிங்கம், கு.ப.கிருஷ்ணன், வெல்லமண்டி நடராஜன், எம்.எல்.ஏ., மனோஜ் பாண்டியன், மருது அழகுராஜ், அஸ்பயர் சுவாமிநாதன், முன்னாள் எம்.பி.,யான கே.சி.பழனிசாமி உட்பட பலரை, மீண்டும் அ.தி.மு.க.,வுக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக, அ.தி.மு.க., வட்டாரங்கள் தெரிவித்தன.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us