
மருங்கூர்
கடலுார் மாவட்டம், பண்ருட்டியில் இருந்து 12 கி.மீ., தொலைவிலும், கடலூரில் இருந்து மேற்கே 32 கி.மீ., தொலைவிலும் உள்ளது மருங்கூர். தமிழக தொல்லியல் துறையின் இணை இயக்குநர் சிவானந்தம் தலைமையில், பாக்யலட்சுமி, சுபலட்சுமி உள்ளிட்ட தொல்லியல் அதிகாரிகள், மருங்கூர் அகழாய்வை செய்து முடித்துள்ளனர்.
சேமிப்புக்கலன்
ஒரு குழியில் 4.40 மீட்டர் ஆழத்தில், 1.25 மீட்டர் உயரமுள்ள இரண்டு சுடுமண் சேமிப்புகலன்கள் வெளிப்பட்டன. அதே மண்ணடுக்கில், எரிந்த நிலையில், 10 செ.மீ., அளவுக்கு கரிமப்பொருட்களின் படிமம் காணப்படுகிறது. அங்கு, சமையல் உள்ளிட்ட பணிகள் நடந்திருக்கலாம் என ஊகிக்கப்படுகிறது.
புதைப்பிடம்
மருங்கூரில், பண்ருட்டி நெடுஞ்சாலையை ஒட்டிய முந்திரிக் காட்டில், இரண்டு இடங்களில் கல்வட்டங்கள் கண்டறியப்பட்டன.
அனைத்து தாழிகளும் சிவப்பு
நிறத்திலேயே உள்ளன. தாழிகளோடு, சிவப்பு, கருப்பு- - சிவப்பு, சிவப்பு பூச்சு, கருப்பு பூச்சு கலையங்கள் கிடைத்துள்ன. ஜாஸ்பர் தாழிகளிலும், கலையங் களிலும், ஏராளமான சிவப்பு நிற மணிகள் கிடைத்து உள்ளன. ஒரு தாழி அருகே மட்டும், 350 சிவப்பு மணிகள் கிடைத்து உள்ளன. இவை, ராஜஸ்தான் மாநில பகுதிகளில் கிடைக்கும் ஜாஸ்பர்.
காலகட்டம்
இங்கு, இரும்பு காலத்தின் இறுதி காலத்தில் இருந்து, தொடக்க வரலாற்று காலம் மற்றும் சங்க காலம் வரை மனிதர்கள் வாழ்ந்துள்ளனர். அவர்களின் வாழ்வியல் பரிமாணங்கள் மற்றும் பரிணாமத்தை அறியும் வகையில், இங்கு அகழாய்வு நடத்தப்பட்டுள்ளது.
சங்க இலக்கியத்தில் மருங்கூர்
சங்க இலக்கியங்களில் மருங்கூர், மருங்கூர்பட்டினம் பற்றிய குறிப்புகள் உள்ளன. மருங்கூர்பட்டினம், பாண்டிய நாட்டு துறைமுகமான அழகன்குளத்துக்கு அருகில் உள்ளது.
நுண்கற்காலத்தின் வயது 12,000 ஆண்டுகள்
தமிழகத்தில், எட்டு இடங்களின் அகழாய்வுகளில், சென்னானுாரில் நுண்கற்கால கரிமப்பொருளின் காலக்கணிப்பு முடிவில், பொ.யு.மு., 10,000 ஆக உறுதியாகி உள்ளது. இதுபோல், புதிய கற்காலம் இரும்புக்காலம். வரலாற்று தொடக்க காலம் சங்ககாலம் உள்ளிட்டவற்றின் காலங்களையும் உறுதி செய்ய கரிமங்கள் கிடைத்துள்ளன. திருமலாபுரத்தில் சதுர வடிவ ஈமக்காடு முதலில் கிடைத்துள்ளதுடன், ஆதிச்சநல்லுாரை போன்ற வெண்கல பொருட்களும் கிடைத்துள்ளன. அவற்றின் முடிவுகள், தமிழக வரலாறுக்கு துணை நிற்கும். அடுத்தகட்டமாக எட்டு இடங்களில் அகழாய்வு செய்ய உள்ளோம்.