ரயில்வே ஆலோசனைக்கூட்டத்தை 'அரசியலாக்கிய' எம்.பி.,க்கள்!
ரயில்வே ஆலோசனைக்கூட்டத்தை 'அரசியலாக்கிய' எம்.பி.,க்கள்!
ரயில்வே ஆலோசனைக்கூட்டத்தை 'அரசியலாக்கிய' எம்.பி.,க்கள்!

திண்டுக்கல் - சபரிமலை ரயில்
வைகோ கூறியதாவது: திண்டுக்கல் - சபரிமலை ரயில் விட வேண்டும். மதுரையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு புதிய ரயில்கள் இயக்க வேண்டும். புதுப்புது வழித்தடங்களை உருவாக்க வேண்டும். என் சொந்த ஊரில் இருந்து 6 கி.மீ.,ல் உள்ள பிரிட்டிஷ் காலத்து கரிவலம்வந்தநல்லுார் ஸ்டேஷனை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தினேன். நிறுத்தப்பட்ட நிறுத்தங்களை மீண்டும் கேட்டுள்ளோம்.
வாரம் 4 நாள் போடி - சென்னை ரயில்
வெங்கடேசன் கூறியதாவது: ரயில்வே துறையில் ஹிந்தி சொல்லை அப்படியே தமிழில் மொழி பெயர்த்துள்ளனர். இப்படி உத்தரவிட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினோம். பாம்பன் புதிய ரயில் பாலம் 33 சதவீதத்திற்கும் குறைவாக பாதுகாப்பு குறை இருப்பதாகவும், வந்தே பாரத் ரயில் இன்ஜின் பகுதி எடை குறைவாக இருப்பதாகவும் ரயில்வே பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளதை எழுத்துப்பூர்வமாக கேட்டுள்ளோம்.
மதுரையில் இருந்து 'மெமு' ரயில்
மாணிக்கம்தாகூர் கூறியதாவது: மதுரையில் இருந்து திண்டுக்கல், தேனி, விருதுநகர், மானாமதுரைக்கு 'மெமு' ரயில் விட வேண்டும் என வலியுறுத்தினோம். மதுரை - அருப்புக்கோட்டை - துாத்துக்குடி வழித்தடம் குறித்து ரயில்வே வாரியம் தெளிவுப்படுத்த வேண்டும். ரயில்வே பணி மக்கள் தொடர்பானது என்பதால் தமிழ் மொழி தெரிந்தவர்களை இங்கு பணியமர்த்த வேண்டும். இவ்வாறு கூறினார்.
உங்களுக்கு தமிழ் தெரியுமா
கூட்டத்தில் பேசிய தங்கத்தமிழ்ச்செல்வன், முன் வரிசையில் இருந்த பொதுமேலாளர் ஆர்.என்.சிங் உள்ளிட்டோரை பார்த்து 'உங்களுக்கு தமிழ் தெரியுமா. தமிழ் பேசுபவர்கள் எல்லாம் பின்வரிசையில் அமர்ந்திருக்கிறார்கள்' என்று கூறியவர், 'தமிழ் தெரிந்தவர்கள் இக்கூட்டத்திற்கு வந்தால் என்ன' என ஆதங்கப்பட்டார்.