நிலச்சரிவு அபாய எச்சரிக்கை! நீலகிரியில் அதிகரிக்கும் விதி மீறல்களால் ஆபத்து
நிலச்சரிவு அபாய எச்சரிக்கை! நீலகிரியில் அதிகரிக்கும் விதி மீறல்களால் ஆபத்து
நிலச்சரிவு அபாய எச்சரிக்கை! நீலகிரியில் அதிகரிக்கும் விதி மீறல்களால் ஆபத்து

வயநாட்டில் துயர சம்பவம்
இந்நிலையில், கேரளம் மாநிலம் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில், நுாற்றுக்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இப்பகுதிகளில் உள்ள மலைகளில் மண் அடுக்கு குறித்த புரிதல் இல்லாமல், அரசும், மக்களும் இருந்ததால், நீர் வழித்தடங்களில் உள்ள, பல நுாறு கட்டடங்கள் காணாமல் போனதாக கூறப்படுகிறது. இதே போல் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள நீலகிரி மாவட்டத்தில் மலை பகுதியில் இயற்கை பேரழிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.
ஐகோர்ட் உத்தரவு மீறல்
நீலகிரியில் கொண்டு வரப்பட்ட 'மாஸ்டர் பிளான்' சட்டம்; ஐகோர்ட் உத்தரவுகளை மீறி, மாவட்டம் முழுவதும் மலையை கரைத்து கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் கட்டடங்கள் கட்டுவது; மண்சரிவுகளை தடுத்து நிறுத்தும் மரங்களை வெட்டுவது; பாறைகள் உடைப்பது போன்ற செயல்கள் அதிகரித்து வருகிறது.
மலை பாதையில் அபாயம்
மேட்டுப்பாளையம் முதல் ஊட்டி வரை தேசிய நெடுஞ்சாலையோரம் விரிவாக்க பணிகள் நடந்த நிலையில், விவசாய பணிக்கு என்ற போர்வையில் பொக்லைன் பயன்படுத்தி மலைகள் குடைந்து மண் அகற்ற ஆளும் கட்சியின் நிர்வாகிகளின் பரிந்துரை பேரில், மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இதனால், குரும்பாடி, டபுள் ரோடு, காந்திபுரம், வெலிங்டன், காணிக்கராஜ் நகர் உட்பட பல இடங்களிலும் மலைகள் குடைந்து சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
கடந்த கால பலி சம்பவங்கள்
'கடந்த, 2014 மே 2ல், குன்னுார் ஸ்டான்லி பார்க் அருகே இருவர்; 2016ம் ஆண்டு டிச.. 22ம் தேதி குன்னுார் டிரம்ளா எஸ்டேட்டில் நான்கு பேர்; 2017 ஜூன் 10ம் தேதி குன்னுார், சி.எம்.எஸ்., பகுதியில் ஒருவர்; கடந்த பிப், 6ம் தேதி ஊட்டி லவ்டேல் அருகே 6 பேர்; ஊட்டி பாப்சா லைனல், 2024 மார்ச் 13ம் தேதி இருவர்; கடந்த, 6ம் தேதி வெலிங்டன் ராணுவ பகுதியில் ஒருவர்,' என, மண் சரிவுகளில் புதைந்து தொழிலாளர்கள் பலியாகி உள்ளனர். இத்தகைய நிலை தொடராமல் இருக்க, மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவேண்டியது அவசியம்.