ஒவ்வொருவரையும் உற்று நோக்குவேன்: நிர்வாகிகள் கூட்டத்தில் கட்சியினருக்கு ஸ்டாலின் எச்சரிக்கை
ஒவ்வொருவரையும் உற்று நோக்குவேன்: நிர்வாகிகள் கூட்டத்தில் கட்சியினருக்கு ஸ்டாலின் எச்சரிக்கை
ஒவ்வொருவரையும் உற்று நோக்குவேன்: நிர்வாகிகள் கூட்டத்தில் கட்சியினருக்கு ஸ்டாலின் எச்சரிக்கை

உழைப்பு
பின், திருச்சியில் உள்ள கட்சி அலுவலகமான அறிவாலயம் சென்றவர், அங்கு மாவட்ட தி.மு.க., நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். இந்நிகழ்ச்சியில், சட்டசபை தேர்தல் பணிகளுக்கான வழிகாட்டுதல்களை, கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். எந்தெந்த சட்டசபை தொகுதிகளில் தி.மு.க., ஓட்டு வங்கி பலமாக உள்ளது; எங்கு பலவீனமாக உள்ளது என்ற விபரத்தை விளக்கி, புள்ளிவிபரங்களுடன் பேசினார்.
கட்டாயம்
இந்த விஷயம் தான், இப்போதைக்கு நமக்கு இருக்கும் சவால். வரும் சட்டசபை தேர்தலில், இழந்த ஓட்டுகளைக் காட்டிலும் கூடுதல் ஓட்டுகளை பெற வேண்டிய கட்டாயம், கட்சிக்காரர்கள் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. அதேபோல, திருச்சி வடக்கு மாவட்டத்தில் இரண்டு கிளை செயலர்கள், தங்கள் பகுதிகளில் கட்சிக்காக பொதுக்கூட்டம் கூட நடத்தாமல் உள்ளனர். இப்படி இருந்தால், அப்பகுதியில் எப்படி ஓட்டு சதவீதத்தை அதிகரிக்க முடியும்?
தேடி வரும்
நம் ஆட்சியே தொடர வேண்டும் என விரும்புகின்றனர். இதை நான் கண்கூடாக பார்க்கிறேன். இருந்தபோதும், கட்சிப் பணியில் யாரும் அலட்சியமாக இருக்கக்கூடாது. தேர்தலில் அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். திருச்சி மாவட்டத்தில், 100 சதவீதம் வெற்றி நம்மை தேடி வர வேண்டும். அதற்காக ஒவ்வொருவரும் உழைக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் பேசியதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.