தி.மு.க., கோவையில் வெற்றி பெற உதவியது எது?
தி.மு.க., கோவையில் வெற்றி பெற உதவியது எது?
தி.மு.க., கோவையில் வெற்றி பெற உதவியது எது?

அவர்கள் கூறியதாவது:
கூட்டணி பலம் மட்டுமின்றி, கிராமப்புற மக்களின் ஆதரவால், கோவை தொகுதியை தி.மு.க., 28 ஆண்டுகளுக்கு பின், வசப்படுத்தி இருக்கிறது.
அதிக ஓட்டுகள் பதிவு
தொகுதி பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட அமைச்சர் டி.ஆர்.பி., ராஜா, கூட்டணி கட்சியினர் மட்டுமின்றி, சிறுபான்மையின அமைப்புகள், பட்டியலின அமைப்புகள், தொழில்துறை அமைப்புகள், வர்த்தக அமைப்புகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் தி.மு.க., பக்கம் கொண்டு வந்தார். இதன் காரணமாக, சட்டசபை தேர்தலில் பெற்ற ஓட்டுகளை காட்டிலும் அதிகமாக தி.மு.க.,வுக்கு பதிவாகியிருக்கிறது.
ஓட்டு வித்தியாசம்
இதேபோல், கவுண்டம்பாளையத்தில், 24 ஆயிரத்து, 460 ஓட்டுகள், சூலுாரில் 20 ஆயிரத்து, 518 ஓட்டுகள் அதிகமாக தி.மு.க.,வுக்கு கிடைத்திருக்கிறது. இம்மூன்று தொகுதிகளில் மட்டும், 82 ஆயிரத்து, 784 ஓட்டுகள் வெற்றி வித்தியாசம் ஏற்பட்டிருக்கிறது.
கைகொடுத்த திட்டங்கள்
ஏனெனில், 2021 சட்ட சபை தேர்தலில் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில், அ.தி.மு.க., கூட்டணிக்கு, ஐந்து லட்சத்து, 97 ஆயிரத்து, 447 ஓட்டுகள் கிடைத்தது. தற்போது, இரண்டு லட்சத்து, 36 ஆயிரத்து, 490 ஓட்டுகளே கிடைத்திருக்கின்றன. மூன்று லட்சத்து, 60 ஆயிரத்து, 957 ஓட்டுகளை அ.தி.மு.க., இழந்திருக்கிறது. இதை தி.மு.க.,வும், பா.ஜ.,வும் பங்கிட்டுள்ளன.