கான்ட்ராக்டர்களாக மாறிய 'ஹைவேய்ஸ்' இன்ஜினியர்கள்! ரோடு வேலையில் ஊழல்
கான்ட்ராக்டர்களாக மாறிய 'ஹைவேய்ஸ்' இன்ஜினியர்கள்! ரோடு வேலையில் ஊழல்
கான்ட்ராக்டர்களாக மாறிய 'ஹைவேய்ஸ்' இன்ஜினியர்கள்! ரோடு வேலையில் ஊழல்

அப்பவும் இப்பவும்...கமிஷன்!
முந்தைய அ.தி.மு.க., ஆட்சியில், நெடுஞ்சாலை பணிகளில் மேலிடத்துக்கு, 12 சதவீதம் வரை கமிஷன் தரப்பட்டு வந்தது. உள்ளூர் ஆளும் கட்சியினர் மற்றும் அதிகாரிகள் தரப்புக்கு தனியாக கமிஷன் வழங்கப்பட்டது. அ.தி.மு.க., முக்கிய பிரமுகர்களே, பினாமிகள் பெயர்களில் கான்ட்ராக்ட் நிறுவனங்களை நடத்தி, பணிகளை எடுத்து செய்ததாக, லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையும் நடந்து வருகிறது.
பணிகள் செய்யாமலே பணம்!
இவை அனைத்துமே, 20 லட்சம் ரூபாய்க்கும் குறைவான மதிப்பிலான பணிகள் தான். கடந்த மே 15 அன்று, இதற்கான ஒப்பந்தங்கள் போடப்பட்ட போது தான், கோவை கோட்ட பொறியாளர், பிப்., 14 என்று முன் தேதியிட்டு, இந்த நோட்டீஸ்களை வெளியிட்டது தெரியவந்தது. இதில் எந்தப் பணியுமே, தகுதி வாய்ந்த அதாவது, இதற்கான தளவாடங்கள் உள்ள கான்ட்ராக்டருக்கு வழங்கப்படவில்லை.
60 சதவீதம் அபேஸ்!
இது தொடர்பாக, துறை செயலாளர் பிரதீப் யாதவ் மற்றும் தலைமை பொறியாளருக்கு அனுப்பியுள்ள புகார் மனுவில், 'சட்டத்துக்கு புறம்பாக தரப்பட்டுள்ள ஒப்பந்தங்களை ரத்து செய்ய வேண்டும்; பணிகள் செய்யப்பட்டிருந்தால், தரக்கட்டுப்பாடு இன்ஜினியர்கள் வாயிலாக ஆய்வு செய்ய வேண்டும். தகுதியான கான்ட்ராக்டர்களுக்கு பணி வழங்க வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது.