
ஆப்பிரிக்கன் நாவல்களை வாங்கிய ராஜமவுலி : மகேஷ்பாபு படத்திற்காகவா?
ஜூன் 19, 2024
Advertisement
ஆர்ஆர்ஆர் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் ராஜமவுலி, நடிகர் மகேஷ்பாபுவை வைத்து தனது அடுத்த படத்தை இயக்க உள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் கடந்த வருடமே வெளியாகிவிட்டது. இந்தப் படம் காடுகளில் நடக்கும் சாகசங்களை மையப்படுத்தி ஒரு பிக்ஷன் படமாக உருவாக இருக்கிறது என்று படத்தின் கதாசிரியரும், இயக்குனர் ராஜமவுலியின் தந்தையுமான விஜயேந்திர பிரசாத் ஏற்கனவே கூறியுள்ளார்.
இந்த நிலையில் ராஜமவுலி புகழ்பெற்ற ஆப்பிரிக்க நாவலாசிரியரான வில்பர் ஸ்மித் எழுதிய டிரையம்ப் ஆப் தி சன் மற்றும் கிங் ஆப் கிங்ஸ் என்கிற இரண்டு நாவல்களின் உரிமையை வாங்கியுள்ளார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே இந்த படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகள் முடிந்து விட்டது என விஜயேந்திர பிரசாத் கூறியுள்ள நிலையில் இயக்குனர் ராஜமவுலி இந்த இரண்டு நாவல்களை வாங்கியுள்ளது மகேஷ்பாபு நடிக்கும் படத்திற்காகவா அல்லது எதற்காக என்கிற கேள்விகளை ரசிகர்கள் மத்தியில் எழுப்பி உள்ளது. அதேசமயம் கதை வேலைகள் முடிந்தாலும் ஆப்பிரிக்க காடுகளில் காட்சிகளை படமாக்குவதற்கு ஒரு விஷன் தேவைப்படுவதால் இந்த நாவல்களை ராஜமவுலி வாங்கி இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் ராஜமவுலி புகழ்பெற்ற ஆப்பிரிக்க நாவலாசிரியரான வில்பர் ஸ்மித் எழுதிய டிரையம்ப் ஆப் தி சன் மற்றும் கிங் ஆப் கிங்ஸ் என்கிற இரண்டு நாவல்களின் உரிமையை வாங்கியுள்ளார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே இந்த படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகள் முடிந்து விட்டது என விஜயேந்திர பிரசாத் கூறியுள்ள நிலையில் இயக்குனர் ராஜமவுலி இந்த இரண்டு நாவல்களை வாங்கியுள்ளது மகேஷ்பாபு நடிக்கும் படத்திற்காகவா அல்லது எதற்காக என்கிற கேள்விகளை ரசிகர்கள் மத்தியில் எழுப்பி உள்ளது. அதேசமயம் கதை வேலைகள் முடிந்தாலும் ஆப்பிரிக்க காடுகளில் காட்சிகளை படமாக்குவதற்கு ஒரு விஷன் தேவைப்படுவதால் இந்த நாவல்களை ராஜமவுலி வாங்கி இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!