
பாக்யராஜ் - பூர்ணிமாவுக்கு கொரோனா
மே 07, 2021
Advertisement
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை சுனாமி போன்று வேகம் எடுத்துள்ள நிலையில் திரையுலகினர் பலரும் இந்நோய் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். இயக்குனர் பாக்யராஜ், அவரது மனைவி பூர்ணா ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுப்பற்றி பாக்யராஜின் மகனும், நடிகருமான சாந்தனு டுவிட்டரில், ‛‛என் பெற்றோர் பாக்யராஜ் - பூர்ணிமாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. எங்கள் வீட்டு பணியாளர்கள் உட்பட அனைவரும் மருத்துவரின் ஆலோசனைப்படி வீட்டு தனிமையில் உள்ளோம். கடந்த 10 நாட்களாக எங்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என கேட்டுக் கொள்கிறோம். இவர்கள் சீக்கிரம் குணமாக பிரார்த்தனை செய்யும்படி வேண்டுகிறேன்"" என பதிவிட்டுள்ளார்.
இந்திய அளவில் திரைக்கதை மன்னன் என பெயர் எடுத்தவர் இயக்குனர் பாக்யராஜ். ஏராளமான படங்களிலும் நடித்துள்ளார். நடிகை பூர்ணிமாவை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு சாந்தனு என்ற மகனும், சரண்யா என்ற மகளும் உள்ளனர். இவர்களில் சாந்தனு நடிகராக உள்ளார்.
இதுப்பற்றி பாக்யராஜின் மகனும், நடிகருமான சாந்தனு டுவிட்டரில், ‛‛என் பெற்றோர் பாக்யராஜ் - பூர்ணிமாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. எங்கள் வீட்டு பணியாளர்கள் உட்பட அனைவரும் மருத்துவரின் ஆலோசனைப்படி வீட்டு தனிமையில் உள்ளோம். கடந்த 10 நாட்களாக எங்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என கேட்டுக் கொள்கிறோம். இவர்கள் சீக்கிரம் குணமாக பிரார்த்தனை செய்யும்படி வேண்டுகிறேன்"" என பதிவிட்டுள்ளார்.
இந்திய அளவில் திரைக்கதை மன்னன் என பெயர் எடுத்தவர் இயக்குனர் பாக்யராஜ். ஏராளமான படங்களிலும் நடித்துள்ளார். நடிகை பூர்ணிமாவை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு சாந்தனு என்ற மகனும், சரண்யா என்ற மகளும் உள்ளனர். இவர்களில் சாந்தனு நடிகராக உள்ளார்.
Advertisement


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!