
நயன்தாரா பாணியில் செயல்பட்ட வனிதா விஜயகுமார்
அதேபோல்தான் கடந்த ஆண்டில் பீட்டர் பால் என்பவரை கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார் நடிகை வனிதா விஜயகுமார். அதையடுத்து முதல் மனைவியை சட்டப்படி விவாகரத்து செய்து கொள்ளாத ஒருவரை திருமணம் செய்து கொண்டதற்காக வனிதாவை நோக்கி ஏராளமான விமர்சனக்கணைகள் பாய்ந்தன.
ஆனபோதும் கலங்காத வனிதா, பீட்டர் பாலுடன் சில மாதங்கள் குடும்பம் நடத்தி வந்தார். ஆனால் அந்த பரபரப்பு அடங்குவதற்குள் வனிதா-பீட்டர் பாலின் உறவும் முடிவுக்கு வந்து, வனிதாவை விட்டு வெளியேறினார் பீட்டர் பால்.
ஆனால் வனிதாவும், பீட்டர் பாலும் சேர்ந்து வாழ்ந்து வந்தபோது ஒருவர் பெயரை இன்னொருவரின் கையில் பச்சைக்குத்திக்கொண்டனர். இந்நிலையில் தற்போது தனது கையில் உள்ள பீட்டர்பாலின் பெயரை வேறு ஒரு சிம்பிளாக மாற்றியுள்ளார் வனிதா. அதை மாற்றுவதையும் வீடியோ எடுத்து தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளார். அதோடு, இனிமேல் யாருடைய பெயரையும் எனது கையில் பச்சைக்குத்த மாட்டேன் என்றும் உறுதி எடுத்துள்ளார் வனிதா.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!