
ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “சமீபநாட்களில் மனம் நிறைந்து கைதட்டி ரசித்துப் பார்த்த படம் தி கேர்ள் பிரண்ட் தான். ராஷ்மிகா நீங்கள் நேஷனல் கிரஷ் மட்டுமல்ல இந்த கேர்ள் பிரண்ட் படத்திற்காக நேஷனல் அவார்டுக்கும் தகுதியானவர். புஷ்பா, அனிமல், குபேரா படங்களில் வித்தியாசமான நடிப்பை வழங்கியது போல இந்த படத்தில் எப்படி உங்களால் நம்பும்படியான அப்பாவித்தனத்தை முகத்தில் காட்ட முடிந்தது. எனக்கு தெரியும் நீங்கள் அந்த கதாபாத்திரமாக வாழ்ந்திருக்கிறீர்கள். ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு ஆணும் இந்த படத்தை கட்டாயம் பார்க்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!