
லோகேஷ் ஓட்டு போட முடியாமல் போனது ஏன் : ஆர்.ஜே பாலாஜி தகவல்
இது குறித்து ஆர் ஜே பாலாஜி கூறுகையில், “சென்னையில் ஓட்டு போட்டுவிட்டு மும்பை செல்வதற்காக நான் விமான நிலையம் சென்றேன். கோயம்பத்தூருக்கு சென்று ஓட்டு போடுவதற்காக லோகேஷ் வந்தார்.. இருவரும் பார்த்து ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்துக் கொண்டோம். நான் உள்ளே சென்ற பிறகு திரும்பி பார்த்தால் லோகேஷை நான்கு அதிகாரிகள் உள்ளே விடாமல் தடுத்து கொண்டிருந்தார். பின்னர் தான் தெரிந்தது அவர் விமான நிலையத்திற்கு குறித்த நேரத்தை கடந்து தாமதமாக வந்தார் என்பதால் அவரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினார்கள் என்பது. அதனால் தான் அவரால் ஓட்டு செலுத்த முடியவில்லை. இந்த தகவலை இப்போது முதல் ஆளாக நான் தான் வெளியே சொல்கிறேன்” என்றார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!