Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மகளிர் ஐ.டி.ஐ.,யில் 31ம் தேதி வரை சேரலாம்

மகளிர் ஐ.டி.ஐ.,யில் 31ம் தேதி வரை சேரலாம்

மகளிர் ஐ.டி.ஐ.,யில் 31ம் தேதி வரை சேரலாம்

மகளிர் ஐ.டி.ஐ.,யில் 31ம் தேதி வரை சேரலாம்

UPDATED : ஜூலை 19, 2024 12:00 AMADDED : ஜூலை 19, 2024 09:03 AM


Google News
கோவை :
மகளிர் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில், 2024ம் ஆண்டுக்கான நேரடி சேர்க்கை, கடந்த 15ம் தேதி வரை மேற்கொள்ளப்பட்டது. கடைசி தேதி வரும் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

8ம் வகுப்பு, எஸ்.எஸ்.எல்.சி.,தேர்ச்சி பெற்ற மகளிர் விண்ணப்பிக்கலாம். நேரில் வருகை புரிவோருக்கு, இந்நிலைய உதவி மையம் மூலம் விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. பயிற்சியில் சேர விரும்பும் மகளிருக்கு, வயது வரம்பு ஏதும் இல்லை. சிறப்பு கட்டணம் ஏதும் இல்லை.

இங்கு பயிலுபவர்களுக்கு மாதம் 750 ரூபாய் உதவித்தொகையும், புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் அரசு பள்ளியில் பயின்ற மகளிருக்கு, மாதம் 1000 ரூபாயும், சைக்கிள், சீருடை, தையற்கூலி, காலணி, பாடப்புத்தகங்கள், வரைபடக் கருவிகள், இலவச பஸ் பாஸ் வழங்கப்படுகிறது.

பயிற்சி நிறைவு செய்யும் தருவாயில், வளாக நேர்காணல் மூலம் வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்படும். விபரங்களுக்கு, 98651 28182/ 94990 55692/ 88381 58132/ 94422 39112 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us