Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/என்.சி.சி., மாணவர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி

என்.சி.சி., மாணவர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி

என்.சி.சி., மாணவர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி

என்.சி.சி., மாணவர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி

UPDATED : ஏப் 23, 2024 12:00 AMADDED : ஏப் 23, 2024 10:36 AM


Google News
Latest Tamil News
புதுச்சேரி:
லாஸ்பேட்டை என்.சி.சி. முகாமில் மாணவர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி நேற்று நடந்தது.

புதுச்சேரி லாஸ்பேட்டை தேசிய மாணவர் படை (என்.சி.சி.) மாணவர்களுக்கு ஒருங்கிணைந்த பயிற்சி முகாம் கடந்த 18 ம் தேதி துவங்கியது. இதில் 3 கல்லுாரிகள், 10 பள்ளிகளைச் சேர்ந்த 225 மாணவ மாணவிகள் பங்கேற்றுள்ளனர்.

முகாமில் பங்கேற்ற மாணவர்களுக்கு தினசரி நடைபயிற்சி, முகாம் அமைப்பு, ஆயுதங்கள் கையாளுதல், தடைகளை தாண்டி செல்லுதல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.

அதில் துப்பாக்கி சுடும் பயிற்சி கடந்த 2 நாட்களாக நடந்து வருகிறது. முகாமில் பங்கேற்றுள்ள என்.சி.சி., மாணவர்கள் ஆர்வமுடன் துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்று வருகின்றனர். இந்த முகாம் வரும் 27ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us