அரசு பள்ளி மாணவர் எண்ணிக்கை எமிஸ் தளத்தில் பதிய புதிய உத்தரவு
அரசு பள்ளி மாணவர் எண்ணிக்கை எமிஸ் தளத்தில் பதிய புதிய உத்தரவு
அரசு பள்ளி மாணவர் எண்ணிக்கை எமிஸ் தளத்தில் பதிய புதிய உத்தரவு
UPDATED : நவ 13, 2024 12:00 AM
ADDED : நவ 13, 2024 08:58 AM

திருப்பூர்:
அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையானது வருகைப் பதிவேடு மற்றும் எமிஸ்தளத்தில் சரியாக இருப்பதை, மாவட்ட தொடக்க கல்வி அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும், என உத்தரவிடப்பட்டுள்ளது.
அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் வருகைப்பதிவேடு மற்றும் எமிஸ் இணையதளம் ஆகியவற்றில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள மாணவர் எண்ணிக்கை, 100 சதவீதம் சரியாக இருப்பதை, குறுவள மைய அளவில் உறுதி செய்ய வேண்டும். ஏதேனும் பள்ளியில் மாணவர் எண்ணிக்கை வருகை பதிவேட்டுக்கும், எமிஸ் தளத்தில் உள்ள பதிவுக்கும் வித்தியாசம் இருப்பின், உடனே அதனை சரி செய்ய வேண்டும்.
மாணவர்கள் யாரேனும் நீண்ட கால விடுப்பில் இருந்து, வேறு பள்ளிகளில் சேர்ந்திருப்பின், சம்மந்தப்பட்ட தலைமை ஆசிரியர் அந்த மாணவர் விவரத்தை எமிஸ் தளத்தில் பொதுப்பகுதிக்கு அனுப்ப வேண்டும். நலத்திட்டங்களை வழங்குவதில் ஏற்படும் சிக்கல்களை தவிர்ப்பதற்காக இந்த பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. எனவே, மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு இப்பணிகளை துரிதமாக செய்து முடிக்க வேண்டும்.
தங்கள் பள்ளி மாணவரின் விபரங்கள், 100 சதவீதம் எமிஸ் இணையதளத்தில் பதிவாகியுள்ளதை பள்ளி தலைமை ஆசிரியர் உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, தொடக்க கல்வி இயக்குனரகம் தரப்பில் இருந்து விரிவான வழிகாட்டுதல்கள், மாவட்ட தொடக்க கல்வித்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையானது வருகைப் பதிவேடு மற்றும் எமிஸ்தளத்தில் சரியாக இருப்பதை, மாவட்ட தொடக்க கல்வி அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும், என உத்தரவிடப்பட்டுள்ளது.
அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் வருகைப்பதிவேடு மற்றும் எமிஸ் இணையதளம் ஆகியவற்றில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள மாணவர் எண்ணிக்கை, 100 சதவீதம் சரியாக இருப்பதை, குறுவள மைய அளவில் உறுதி செய்ய வேண்டும். ஏதேனும் பள்ளியில் மாணவர் எண்ணிக்கை வருகை பதிவேட்டுக்கும், எமிஸ் தளத்தில் உள்ள பதிவுக்கும் வித்தியாசம் இருப்பின், உடனே அதனை சரி செய்ய வேண்டும்.
மாணவர்கள் யாரேனும் நீண்ட கால விடுப்பில் இருந்து, வேறு பள்ளிகளில் சேர்ந்திருப்பின், சம்மந்தப்பட்ட தலைமை ஆசிரியர் அந்த மாணவர் விவரத்தை எமிஸ் தளத்தில் பொதுப்பகுதிக்கு அனுப்ப வேண்டும். நலத்திட்டங்களை வழங்குவதில் ஏற்படும் சிக்கல்களை தவிர்ப்பதற்காக இந்த பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. எனவே, மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு இப்பணிகளை துரிதமாக செய்து முடிக்க வேண்டும்.
தங்கள் பள்ளி மாணவரின் விபரங்கள், 100 சதவீதம் எமிஸ் இணையதளத்தில் பதிவாகியுள்ளதை பள்ளி தலைமை ஆசிரியர் உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, தொடக்க கல்வி இயக்குனரகம் தரப்பில் இருந்து விரிவான வழிகாட்டுதல்கள், மாவட்ட தொடக்க கல்வித்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.