Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ நீட் தேர்வு முறைகேடு: ஜூன் 21ல் காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டம்

நீட் தேர்வு முறைகேடு: ஜூன் 21ல் காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டம்

நீட் தேர்வு முறைகேடு: ஜூன் 21ல் காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டம்

நீட் தேர்வு முறைகேடு: ஜூன் 21ல் காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டம்

UPDATED : ஜூன் 20, 2024 12:00 AMADDED : ஜூன் 20, 2024 10:34 PM


Google News
புதுடில்லி:
நீட் தேர்வில் முறைகேடு நடைபெற்றது தொடர்பாக ஜூன் 21ல் நாடு முழுவதும் உள்ள மாநில தலைநகரங்களில் போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
நடந்து முடிந்த மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வில் ஆள்மாறாட்டம், வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண் வழங்கியது போன்ற முறைகேடுகள் நடைபெற்றதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. இது தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நீட் தேர்வு முறைகேடு நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், நீட் தேர்வுக்கு எதிராகவும், முறைகேடு தொடர்பாகவும் அனைத்து மாநில தலைநகரிலும் நாளை மறுநாள் (ஜூன் 21) போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
திமுக மாணவரணி ஜூன் 24ல் போராட்டம்
நீட் தேர்வுக்கு எதிராக திமுக மாணவரணி சார்பில் ஜூன் 24ல் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளது. நீட் தேர்வில் நடந்த மோசடி, குளறுபடிகளை கண்டித்து போராட்டம் நடைபெறும் என திமுக மாணவரணி செயலாளர் எழிலரசன் தெரிவித்தார்.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us