Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பல்திறன் போட்டி

பல்திறன் போட்டி

பல்திறன் போட்டி

பல்திறன் போட்டி

UPDATED : ஏப் 03, 2024 12:00 AMADDED : ஏப் 03, 2024 09:29 AM


Google News

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை செந்தமிழ்க் கல்லுாரியில் யுவ சம்வாத் - இந்தியா 2047 என்ற நிகழ்ச்சி காமராஜ் பல்கலை என்.எஸ்.எஸ்., சார்பில் நடந்தது.

நான்காம் தமிழ்ச்சங்க செயலர் மாரியப்பமுரளி தலைமை வகித்தார். என்.எஸ்.எஸ்., திட்ட ஒருங்கிணைப்பாளர் பாண்டி பங்கேற்றார். முதல்வர் சாந்திதேவி, இணைப் பேராசிரியர் பூங்கோதை பேசினர். சரஸ்வதி நாராயணன் கல்லுாரி வணிகவியல் துறைத் தலைவர் ஜெயக்கொடி, என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் விஜயகுமார், கல்லுாரி துணை முதல்வர் ரேவதி சுப்புலட்சுமி, மதுரை இலக்கியப் பேரவை நிறுவனர் சண்முக திருக்குமரன், அன்னை பாத்திமா கல்லுாரி தமிழ்த் துறைத் தலைவர் முனியாண்டி பல்வேறு தலைப்புகளில் பேசினர்.

பேச்சு, கட்டுரை, கவிதை, ஓவியப் போட்டி நடந்தது. நடுவர்களாக பல்கலை பேராசிரியர் கருப்பத்தேவன், ரவிசங்கர், செல்வராணி, வேணுகா பங்கேற்றனர். ஆசிரியர்கள் செல்வத்தரசி, கோகிலா ஒருங்கிணைத்தனர். பேராசிரியர் நேருஜி நன்றி கூறினார்.