Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சட்ட படிப்பு காலி இடங்களுக்கு 6ம் தேதி மாப் ஆப் கவுன்சிலிங்

சட்ட படிப்பு காலி இடங்களுக்கு 6ம் தேதி மாப் ஆப் கவுன்சிலிங்

சட்ட படிப்பு காலி இடங்களுக்கு 6ம் தேதி மாப் ஆப் கவுன்சிலிங்

சட்ட படிப்பு காலி இடங்களுக்கு 6ம் தேதி மாப் ஆப் கவுன்சிலிங்

UPDATED : டிச 04, 2024 12:00 AMADDED : டிச 04, 2024 03:58 PM


Google News
Latest Tamil News
புதுச்சேரி:
அம்பேத்கர் அரசு சட்டக் கல்லுாரியில் காலியாக முதுகலை சட்ட படிப்பு இடங்களுக்கான மாப்-ஆப் கவுன்சிலிங் வரும் 6ம் தேதி நடக்கிறது.

புதுச்சேரி, அம்பேத்கர் அரசு சட்டக் கல்லுாியில் முதுகலை சட்ட படிப்பு மற்றும் முதுகலை பிரெஞ்சு சட்ட பட்டைய படிப்புக்கான 2024- 25ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு கடந்த 16ம் தேதி நடந்தது.

இதில், முதுகலை சட்ட படிப்பில் 4 இடங்களும் (எஸ்.சி., பிரிவினர் மட்டும்), முதுகலை பிரெஞ்சு சட்ட பட்டைய படிப்பில் 5 இடங்களும் காலியாக உள்ளது. இந்த இடங்களை நிரப்புவதற்கான மாப்-ஆப் கவுன்சிலிங் வரும் 6ம் தேதி அம்பேத்கர் அரசு சட்டக் கல்லுாரி வளாகத்தில் நடக்கிறது.

முதுகலை சட்ட படிப்பில் எஸ்.சி., பிரிவில் காலியாக உள்ள 4 இடங்கள் சாதி சான்றிதழ் தகுதியின் அடிப்படையில் ஒதுக்கப்படும். முதுகலை பிரெஞ்சு சட்ட பட்டைய படிப்பில் காலியாக உள்ள 5 இடங்கள் அரசிடமிருந்து வழங்கப்பட்ட குடியிருப்புச் சான்றிதழ்களை கொண்டு ஒதுக்கப்படும்.

எனவே, முதுகலை சட்ட படிப்பில் ஆர்வமுள்ள மாணவர்கள் வரும் 6ம் தேதி காலை 11:00 மணிக்கு, முதுகலை பிரெஞ்சு சட்ட பட்டைய படிப்பில் ஆர்வமுள்ள மாணவர்கள் மதியம் 2:30 மணிக்கு தேவையான அனைத்து அசல் சான்றிதழ்களுடன் கலந்து கொள்ளலாம். இதில், விண்ணப்பிக்காத தகுதியான விண்ணப்பதாரர்களும் பங்கேற்கலாம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us