Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சட்ட பள்ளி, சாய் பல்கலை இணைந்து வழங்கும் சட்டம் குறித்து சொற்பொழிவு

சட்ட பள்ளி, சாய் பல்கலை இணைந்து வழங்கும் சட்டம் குறித்து சொற்பொழிவு

சட்ட பள்ளி, சாய் பல்கலை இணைந்து வழங்கும் சட்டம் குறித்து சொற்பொழிவு

சட்ட பள்ளி, சாய் பல்கலை இணைந்து வழங்கும் சட்டம் குறித்து சொற்பொழிவு

UPDATED : ஏப் 08, 2024 12:00 AMADDED : ஏப் 08, 2024 06:12 PM


Google News
Latest Tamil News
சென்னை:
சட்ட பள்ளி, சாய் பல்கலைக் கழகம் எஸ். கிருஷ்ணமூர்த்தி அறக்கட்டளை சொற்பொழிவு வரிசையில் சட்டம் குறித்த இரண்டாவது சொற்பொழிவை சென்னை மியூசிக் அகாடெமி அரங்கில் நடத்தியது.

மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு, இந்த சட்டம் பற்றிய எஸ். கிருஷ்ணமூர்த்தி அறக்கட்டளை சொற்பொழிவின் இரண்டாவது தொடரில், நீதித்துறை மறு ஆய்வுக் கோட்பாடு மற்றும் தலைமை நீதிபதி ஜான் மார்ஷல் என்ற தலைப்பில் உரையாற்றினார். சட்டங்களை மறுபரிசீலனை செய்வதற்கான நீதிமன்றங்களின் அதிகாரம் பற்றிய இந்த அறிவொளி உரையில் பஞ்சு, இந்தியா தனது அரசியலமைப்பை தேசிய வாழ்க்கைக்கான அடிப்படை வழிகாட்டியாக வடிவமைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

நீதித்துறை மறு ஆய்வின் முக்கியத்துவத்தை கோடிட்டு காட்டும் வகையில் அரசியலமைப்பின் பாதுகாவலராகவும், மொழி பெயர்ப்பாளராகவும் நீதிமன்றத்தை நிறுவுவதில் ஜான் மார்ஷல் மேற்கொண்ட நடவடிக்கைகளை பற்றி பேசினார். நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பேசுகையில் ஜான் மார்ஷல் காலத்திலிருந்து நீதிமன்றத்துக்கு விசுவாசமானவர்களை நியமிக்கும் நடைமுறை இருந்ததைக் குறிப்பிட்டார்.

சாய் பல்கலைக் கழகத்தின் வேந்தர் கே.வி. ரமணி மற்றும், துணை வேந்தர் பேராசிரியர் ஜாம்ஷெட் பரூச்சா ஆகியோரும் இந்நிகழ்வில் உரையாற்றினர். சட்ட பள்ளியின் செயல் தலைவர் பேராசிரியர் ஷிஜு நன்றியுரை நிகழ்த்தினார்.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us