Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு அலுவலர், ஆசிரியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வு

அரசு அலுவலர், ஆசிரியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வு

அரசு அலுவலர், ஆசிரியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வு

அரசு அலுவலர், ஆசிரியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வு

UPDATED : மார் 13, 2024 12:00 AMADDED : மார் 13, 2024 09:39 AM


Google News
சென்னை: அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, ஜனவரி, 1 முதல் அகவிலைப்படியை, 4 சதவீதம் உயர்த்தி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுஉள்ளார்.அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கையின்படி, &'2023 ஜூலை 1 முதல், மத்திய அரசு பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வை அறிவிக்கும் போதெல்லாம், தமிழக அரசும், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, அகவிலைப்படியை உயர்த்தி வழங்கும்&' என, முதல்வர் அறிவித்தார்.தற்போது, மத்திய அரசு பணியாளர்களுக்கு, கடந்த ஜன., 1 முதல் 46சதவீதமாக இருந்த அகவிலைப்படியை, 50 சதவீதமாக உயர்த்தி வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. அதன்படி, தமிழக அரசு பணியாளர்களுக்கும், ஜன., 1 முதல், 46 சதவீதமாக உள்ள அகவிலைப்படியை, 4 சதவீதம்உயர்த்தி, 50 சதவீதமாக வழங்க, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.அகவிலைப்படி உயர்வால், 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவர். இதனால், ஆண்டுக்கு 2,587.91 கோடி ரூபாய், அரசுக்கு கூடுதல் செலவினம் ஏற்படும்.






      Our Apps Available On




      Dinamalar

      Follow us