UPDATED : பிப் 12, 2024 12:00 AM
ADDED : பிப் 12, 2024 09:55 AM
திருப்பூர்:
பொதுத்தேர்வுக்கு இன்னமும் மூன்று வாரமே உள்ள நிலையில், தேர்வுக்கான முன்னேற்பாட்டு பணிகளை தேர்வுத்துறை இயக்குனரகம் முடுக்கி விட்டுள்ளது. மாவட்ட அளவில், தேர்வுகளை திறம்பட, எவ்வித குளறுபடிகளும் இல்லாமல் நடத்த, ஒவ்வொரு மாவட்டத்துக்கும் இணை இயக்குனர் நிலையான அதிகாரிகள், கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளனர்.அவ்வகையில், திருப்பூர் மாவட்டத்துக்கு பொதுத்தேர்வு நடத்தும் அதிகாரியாக, ஆசிரியர் தேர்வு வாரிய இணை இயக்குனர் ஆனந்தி நியமிக்கப்பட்டுள்ளார்.விரைவில், துவங்க உள்ள செய்முறை தேர்வு, மார்ச் முதல் வாரம் துவங்க உள்ள பொதுத்தேர்வு, அதற்கான ஏற்பாடுகள் குறித்து விரைவில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் இவர் ஆலோசனை நடத்துவார் என கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பொதுத்தேர்வுக்கு இன்னமும் மூன்று வாரமே உள்ள நிலையில், தேர்வுக்கான முன்னேற்பாட்டு பணிகளை தேர்வுத்துறை இயக்குனரகம் முடுக்கி விட்டுள்ளது. மாவட்ட அளவில், தேர்வுகளை திறம்பட, எவ்வித குளறுபடிகளும் இல்லாமல் நடத்த, ஒவ்வொரு மாவட்டத்துக்கும் இணை இயக்குனர் நிலையான அதிகாரிகள், கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளனர்.அவ்வகையில், திருப்பூர் மாவட்டத்துக்கு பொதுத்தேர்வு நடத்தும் அதிகாரியாக, ஆசிரியர் தேர்வு வாரிய இணை இயக்குனர் ஆனந்தி நியமிக்கப்பட்டுள்ளார்.விரைவில், துவங்க உள்ள செய்முறை தேர்வு, மார்ச் முதல் வாரம் துவங்க உள்ள பொதுத்தேர்வு, அதற்கான ஏற்பாடுகள் குறித்து விரைவில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் இவர் ஆலோசனை நடத்துவார் என கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.