Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/செவித்திறன் கருவிகள் மாணவர்களுக்கு வழங்கல்

செவித்திறன் கருவிகள் மாணவர்களுக்கு வழங்கல்

செவித்திறன் கருவிகள் மாணவர்களுக்கு வழங்கல்

செவித்திறன் கருவிகள் மாணவர்களுக்கு வழங்கல்

UPDATED : ஜன 23, 2024 12:00 AMADDED : ஜன 23, 2024 09:33 AM


Google News
Latest Tamil News
உடுமலை: திருப்பூர் மாவட்டத்தைச்சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் 33 பேருக்கு, செவித்திறன் கருவி இலவசமாக வழங்கப்பட்டது.திருப்பூர் மாவட்டத்திலுள்ள அரசுப்பள்ளிகளில், செவித்திறன் பாதித்த, 214 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இவர்களில், 60 பேருக்கு செவித்திறன் கருவி தேவைப்படுவது கண்டறியப்பட்டு, அளவீடு செய்யப்பட்டது.முதல்கட்டமாக, 33 மாணவர்களுக்கான செவித்திறன் கருவிகள் தயார் செய்யப்பட்டுள்ளன. இதனையடுத்து ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டம் மற்றும் இந்தியா தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில், செவித்திறன் கருவி வழங்கும் நிகழ்ச்சி திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது.கலெக்டர் கிறிஸ்துராஜ், மாணவ, மாணவியருக்கு செவித்திறன் கருவிகளை இலவசமாக வழங்கினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா, ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்ட உதவி அலுவலர் அண்ணாதுரை, இந்தியா தன்னார்வ தொண்டு நிறுவன அலுவலர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பங்கேற்றனர்.






      Our Apps Available On




      Dinamalar

      Follow us