Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கல்லுாரி மாணவிகளுக்கு அருங்காட்சியகத்தில் பயிற்சி

கல்லுாரி மாணவிகளுக்கு அருங்காட்சியகத்தில் பயிற்சி

கல்லுாரி மாணவிகளுக்கு அருங்காட்சியகத்தில் பயிற்சி

கல்லுாரி மாணவிகளுக்கு அருங்காட்சியகத்தில் பயிற்சி

UPDATED : மே 30, 2024 12:00 AMADDED : மே 30, 2024 09:35 AM


Google News
ஈரோடு:
ஈரோடு மற்றும் பிற மாவட்டங்களை சேர்ந்த அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில், வரலாறு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு, ஈரோடு அரசு அருங்காட்சியகத்தில் உள் விளக்க பயிற்சி வழங்குவது வழக்கம்.

இந்த வகையில் குமராபாளையம் ஜே.கே.கே.என்., கல்லுாரி மற்றும் கோவை பி.எஸ்.ஜி., கிருஷ்ணம்மாள் கல்லுாரியில் பயிலும் வரலாற்றுத்துறை மாணவியர், 80க்கும் மேற்பட்டோருக்கு, உள் விளக்க பயிற்சி நேற்று தொடங்கியது. 15 நாட்கள் நடக்கும் இப்பயிற்சியில், அருங்காட்சியகம் பற்றிய விளக்கம், அருங்காட்சியகங்களின் வகை, கலை பண்பாடு வளர்ப்பதில் அருங்காட்சியகத்தின் பங்கு, ஓலைச்சுவடி, நாணயங்கள், மர சிற்பங்கள் பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து, காப்பாட்சியர் ஜென்சி விளக்கம் அளிப்பார்.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us