Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/டெல்டா மாவட்டங்களில் கனமழை; நாகை, காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை!

டெல்டா மாவட்டங்களில் கனமழை; நாகை, காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை!

டெல்டா மாவட்டங்களில் கனமழை; நாகை, காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை!

டெல்டா மாவட்டங்களில் கனமழை; நாகை, காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை!

UPDATED : நவ 19, 2024 12:00 AMADDED : நவ 19, 2024 08:17 AM


Google News
Latest Tamil News
சென்னை:
கனமழை பெய்து வருவதால், காரைக்கால், நாகை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் டெல்டா மற்றும் தென்மாவட்டங்களில், வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகத்தில் ஒரு சில இடங்கள் மற்றும் புதுச்சேரியில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்து வருகிறது.

மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், துாத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கனமழை காரணமாக, எந்தெந்த மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை விபரம்;

* கனமழை காரணமாக காரைக்காலில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

* நாகை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

* தஞ்சாவூர் மாவட்டத்தில் கனமழை இருக்கும் பகுதிகளில், விடுமுறை அளிப்பது தொடர்பாக அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர் முடிவு எடுக்கலாம் என மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us