Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை பதிவு துவக்கம்

அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை பதிவு துவக்கம்

அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை பதிவு துவக்கம்

அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை பதிவு துவக்கம்

UPDATED : மே 16, 2024 12:00 AMADDED : மே 16, 2024 10:27 AM


Google News
உடுமலை:
அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை பதிவு துவங்கியுள்ளது.

உடுமலை, அரசு தொழிற்பயிற்சி நிலையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, 14 முதல் 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பெண்களுக்கு வயது வரம்பு இல்லை.

எலக்ட்ரீசியன் - 20 இடங்கள், பிட்டர் (20), மோட்டார் வாகன மெக்கானிக் (24), இன்டஸ்ட்ரியல் ரோபோடிக்ஸ் மற்றும் டிஜிட்டல் மேனுபேக்சரிங் டெக்னீசியன் (40), மேனுபேக்சரிங் பிராசஸ் கண்ட்ரோல் மற்றும் ஆட்டோமேஷன் (40), அட்வான்ஸ்டு சிஎன்சி மெஷின் டெக்னீசியன் (20), உள்ளிட்ட பாடப்பிரிவுகளுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றும், ஒயர்மேன் (20), வெல்டர் (40) இரண்டு பிரிவுகளுக்கும் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும் இருக்க வேண்டும்.

விண்ணப்பங்களை, www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். கூடுதல் தகவல் பெற, 04252 223340, 99442 06017, 95855 39650, 73732 78939 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us